Saturday, March 7, 2015

அவ்வளவுதான் போல

இன்று திருச்சி ஆதிசங்கரர் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழாவில் பேசினேன். என்னை அழைத்துப் போவதற்காக அண்ணன் ராமமூர்த்தி அவர்கள் வந்திருந்தார். அவர் வரும்போது என் அறையில் அமர்ந்து ஏதோ வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த வயசிலும் எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி படித்துக் கொண்டே இருக்க என்றவரிடம் படிக்கிற வயசுல படிக்காம போனதால இப்ப இப்படி படிக்க வேண்டி கிடக்கு என்றேன்.

இப்படி படிச்சு என்ன செஞ்சிடப் போற என்று விடாது கேட்டவரிடம் தப்பா ஏதும் செஞ்சிடாம பார்த்துக்குது இந்த வாசிப்பு, அவ்வளவுதான் என்றேன்.

யோசித்துப் பார்த்தால் அவ்வளவுதான் போல.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...