Saturday, March 21, 2015

கடைத் தேங்காயை....

சுரங்க மசோதா என்பது பொதுச் சொத்தை, அள்ளித் தரும் கனிம வளங்களை ஒரு பத்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது. அரசுக்கு சொந்தமாமான கனிம வளத்தை தனியார் பெயருக்கு பட்டா போட்டு தருவது.

140 கோடி மக்களுக்கு சொந்தமான சொத்தை பிடுங்கி ஒரு பத்து முதலாளிகளுக்கு கொடுக்கிற ஏற்பாடு. இந்த 140 கோடி மக்களுள் தி.மு.க, அ.தி.மு.க, திரிணாமுல் ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் அடங்கும்.

தங்களது இயக்கத்திற்கோ தலமைக்கோ பிரச்சினைகள் வரும்போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் துறக்கும் மிகவும் உணர்ச்சிகரமான விசுவாசமான ஊழியர்களை கை வைத்திருக்கும் கட்சிகள் இவை.

அப்படி இருக்கையில் அத்தகைய அப்பாவி கட்சி ஊழியர்களின் சொத்தைப் பறித்து எவனோ சிலருக்கு கொடுக்க அனுமதி கேட்ட இந்த மசோதாவிற்கு ஆதரவாக ஏன் இந்த கட்சிகளின் தலைமைகள் தன்னெழுச்சியாக கையைத் தூக்கின.

தன் கட்சி ஊழியர்களை விடவும் அந்த முதலாளிகள் வேண்டப் பட்டவர்களா? . ஆமாம், ஆனால் அது மட்டும் அல்ல.

2G, மகள், பேரன்கள், சாரதா சீட்டுக் கம்பேனி, பெங்கலூர் தீர்ப்பு இப்படி ஏராளம் இருக்கிறதே.

தொண்டர்களை பழிகொடுத்து தங்களை வளப்படுத்தும் செயலுக்கு ஆக சமீபத்திய சரியான உதாரணம் மசோதாவிற்கான இவர்களது ஆதரவாகும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...