Monday, March 30, 2015

மகள்களே....


உலகக் கோப்பை என்றாலே எதோ கிரிக்கெட் என்பதாக மட்டுமே பார்க்கக் கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிப் போனது. அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி தோற்றுப் போனதும் இந்திய இளைஞர்களில் ஒரு பெரும் பகுதியினர் சோகத்தில் உறைந்திருக்கிறார்கள். சில எண்பதுகள்கூட சோகத்தில்தான் உள்ளனர்.
இந்த நேரத்தில் உலகக் கோப்பையை இந்திய மகளிர் கபடி அணி வென்றிருக்கிறது. தேசத்தின் கொடியோடு அந்தக் குழந்தைகள் மைதானத்தை துள்ளி வலம் வந்தபோது அந்த உணர்ச்சிப் பெரு வெள்ளத்தில் கறைந்து போனேன்.
அவர்கள் நாடு திரும்பி வீட்டிற்கு நடந்து போகையில் யாரும் அவர்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.
கிரிக்கெட்டில் தோற்றதும் ஒரு பிள்ளை நாக்கை அறுத்துக் கொள்கிறான், ஒருவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான்.
இதற்கெல்லாம் மாறாக, கோப்பையோடு வந்திருக்கும் உங்கள் சகோதரிகளை, தோழிகளை ஒரு புன்னகையோடு வாழ்த்தலாமே. மகிழ்ந்து கொண்டாடலாமே.


இறகுப் பந்துப் போட்டியில் உலகின் முதலாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறாள் சாய்னா. 2011 காமன் வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றதும் சாய்னா சொன்னாள், “ I won the gold because I did not repeat my mistakes”
இதை சொன்னபோது இன்னும் நான்கு வயது குறைவு அவளுக்கு. எவ்வளவு சரியான புரிதலும் செயல்பாடும் ஆகும் இது. செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறினை செய்யும் யாரும் தோற்றுத்தான் போவோம்.
சாதித்த இந்த மகள்களுக்கு இந்த அப்பனின் வாழ்த்துக்களும் முத்தங்களும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...