Sunday, March 15, 2015

நான் அங்கே இருப்பேன்

தோழர் அரவிந்தன் அவர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தை வருகிற 19 ஆம் தேதியன்று காக்கை (Kaakkai Cirakinile​) ஏற்பாடு செய்திருக்கிறது. எழும்பூர் இக்‌ஷா அரங்கில் 19 வியாழன் மாலை ஆறு மணிக்கு நிகழ்வு துவங்கும்.

தேர்வு காலமாக இருப்பதால் இதில் நான் பங்கேற்க இயலாத நிலை. முத்தையாவும், சந்திரசேகரும் நான் பங்கேற்கிற மாதிரியான ஒரு நாளைத் தேடினார்கள்.  எனக்கு தோதான ஒரு நாளில் வைக்கலாம் எனில் அரங்கம் வாய்க்க மறுக்கிறது. அது மட்டுமல்லாமல் தோழர்கள் CMahendran Mahendran​, ட்ராட்ஸ்கி மருது, வீரசந்தானம்,  மாணிக்கம் உள்ளிட்ட அரவிந்தனோடு நெருங்கிப் பழகிய தோழர்கள் ஒருசேர அன்றுதான் கிடைக்கிறார்கள்.

காக்கையின் பெயரால் எங்கே மூன்றுபேர் நான்குபேர் கூடினாலும் நான் அங்கே இருப்பேன் ( இயேசுநாதர் மன்னிப்பாராக அப்படி ஒருவர் இருப்பின்) என்ற வகையில் தோழர்கள் அங்கென்னை உணர இயலும்.

வாய்ப்புள்ள சென்னை தோழர்களை அன்புடன் அழைக்கிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...