Tuesday, March 3, 2015

குட்டிப் பதிவு 22

வட்டிக்காரர் மீது இருக்கும் பயம்கூட மரணத்தின் மீது எப்போதும் இருந்ததில்லை எனக்கு. கலியன் கடையில் எமனோடு ஒரு கோப்பை தேநீர் பருகிவிட்டு அவனோடு புறப்பட தயாராய்தான் இருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் மரணத்திற்கும் எனக்குமான இடைவெளி ரொம்பவும் குறைந்து விட்டதாகவே சமீப காலமாய் உள்ளுணர்வு சொல்கிறது. உண்மையை சொன்னால் எதற்கும் தயாராகவே இருந்த என்னை தோழர் மாயாண்டி பாரதிக்காக தோழர் தணிகை இன்றைய ( 03.03.15) தீக்கதிரில்எழுதிய கவிதை புரட்டிப் போட்டுவிட்டது.
இப்படி ஒரு இரங்கலை என் தலைமுறையின் மக்கள் கவிஞன் ஒருவன் எனக்கு எழுதுவான் என்று நம்பிக்கை வரும் வரைக்கும் உழைத்துவிட்டுத்தான் போக வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...