Sunday, July 20, 2014

நிலைத் தகவல் 60


மாண்புமிகு முதல்வர் அவர்களை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்களில் நானும் ஒருவன். இன்னமும் அந்த நிலையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. 

ஆனால் சமீப காலமாக அவரது நடவடிக்கைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தமிழ் மொழியோடு, தமிழ்க் கலாச்சார அடையாளங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய செயல்பாடுகள் வந்திருக்கும் என்றால்கூட கொண்டாடியிருக்கவே செய்திருப்போம். ஆனால் அப்படி எந்த ஒரு இடத்திலும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத, இன்னும் சொல்லப் போனால் இத்தகைய அடையாளங்களுக்கு எதிராகவே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் தன்னை பொறுத்தி வெளிப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய எதிர்வினைகள் வெளி வரும் போது அதைக் கொண்டாடி வரவேற்று வாழ்த்துவது கடமையாகும்.

                                                                      1

அது ஒரு புத்தக வெளியீடு. 

காரிலிருந்து இறங்கி அரங்கம் நோக்கி நடக்கிறார் அவர். உள்ளே நுழைகிறவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஒருவர் தடுக்கிறார். ஏன் என்று கேட்டபோது வேட்டி கட்டியவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்கிறார்.

அரங்கின் உள்ளே நுழைய இருந்தவர் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி. அவரைத் தடுத்தவர் அந்த அரங்கத்தின் வாயிற் காவலர்.

இதேமாதிரியான ஒரு அனுபவம் டிராஃபிக் ராமசாமி அவர்களுக்கும் அதே அரங்கத்தில் ஒருமுறை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

அந்த அரங்கம் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் பில் உள்ளது. அந்த கிளப் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டது. அப்போது எல்லோரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதைக் காட்டிலும் இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு அப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்தது.

அப்படியும் வேட்டி கட்டியவர்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்லவில்லை. கண்ணியமான உடையோடு உள்ளே வரவேண்டும் என்றுதான் சொல்கிறது. 

அப்படி என்றால் வேட்டி கண்ணியமான உடை இல்லையா என்ற நியாயமான கேள்வியோடு, வேட்டியை நிராகரிக்கும் எந்த கிளப்புகளுக்கும் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என்று அறிவித்தார்.

இதை வணங்கி வரவேற்கிறோம்.

                                                                  2

இரண்டாவதாக பன்முகத்தன்மையை சிதைப்பது என்ற தனது மறைமுக செயல்திட்டத்தை பி.ஜே.பி கையிலெடுத்தபோது முதல்வர் ஆற்றிய எதிர்விணை.

சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு தனது பள்ளிகளுக்கு மத்திய அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் துவக்கத்தில் எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று இருப்பதாக அறிய முடிகிறது.

இதனை அறிந்ததும் சமஸ்கிருதத்தின் மீது அளப்பற்ற பற்று வைத்திருக்கக் கூடிய நமது முதல்வர் அவர்களது எதிர்விணையானது மிகச் சரியானது.

இந்தியா போன்ற பலமொழிகள் புழங்கக் கூடிய, பன்முகதன்மை கொண்ட ஒரு நாட்டில் இத்தகைய முயற்சியானது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று சொன்னதோடு அதை தன் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துளார்.

சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்கிற ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதென்பது ஆர்.எஸ்.எஸ் சின் திட்டம். அதைத்தான் மத்திய அரசு இப்போது கையிலெடுத்திருக்கிறது.

இந்த சுற்றரிக்கைகையை போகிற போக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது. இது மிகவும் விஷமத் தனமானது. மட்டுமல்ல இது ஏதோ மொழி சம்பந்தப் பட்ட பிரச்சினை மட்டுமன்று. சமஸ்கிருதம் தேவபாசை என்றும் தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகள் நீஷ பாஷைகள் என்றும் சொல்பவர்களால் இது முன்னெடுக்கப் படுவதால் இதற்குள் மதம் நிச்சயமாக இருக்கிறது.

இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லாத பட்சத்தில் உணர்ச்சிவசப் படாமல் தமிழ்ச் சமூகம் மிகுந்த திட்டமிடலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

முதல்வரின் சரியான நிலைபாட்டிற்காக மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறோம்

5 comments:

  1. பாரட்ட வேண்டியவர்களைப் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டும் உங்கள் பாங்கு பாராட்டக்கூடியது!!

    ReplyDelete
  2. அருமை. ஒருவரை கண்மூடித் தனமாக எதிர்ப்பது வேறு, அவரது தவறுகளை எதிர்ப்பது வேறு. இதனை சரியாகக் கையாண்டு உள்ளீர்கள். நமது வலைத்தளம் : சிகரம்

    ReplyDelete
  3. முதல்வர் பாராட்டிற்கு உரியவர்தான் தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...