Saturday, July 19, 2014

நிலைத் தகவல் 59

பயணங்களின் ரசிகன் நான்.

ஒரு தாய் மாதிரி பயணம் நிறைய தந்திருக்கிறது எனக்கு.

பலருக்கு களைப்பைத் தரும் பயணங்கள் எனது களைப்பை சுத்தமாய் துடைத்துப் போடுகின்றன. 

புத்தனுக்கு போதி மரமென்றால் எனக்கு வைப்பர் வேலை செய்யாத அரசுப் பேருந்து என்று ஒரு முறை நான் எழுதியது சத்தியம்.

ஒரு முறை யகமாயினி சித்தன் என்னிடம் உனது பேருந்து பயணங்கள் குறித்து ஒரு தொடர் எழுதேன் என்றார். எழுத இருந்த போது நாங்கள் யுகமாயினியை நிறுத்த வேண்டியதாயிற்று.

நேற்று முன்தினம் ஒரு வேலையாக கடலூர் போகவேண்டி இருந்தது.

உளுந்தூர்பேட்டையில் மூன்று பேர் அமரும் இருக்கையில் இடம் கிடைத்தது. ஜன்னலோரத்தில் ஒரு இளைய பெண், அடுத்து அவரது கணவர், அவருக்கடுத்தது நான்.

உழைத்துப் பிழைக்கிற இணையராகத் தெரிந்தார்கள்.

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டே வந்தார்கள். அவர்களது நீண்ட உரையாடலில் எந்த இடத்திலும் சலிப்போ, வருத்தமோ, கவலையோ அயற்சியோ எதுவுமே தெரியவில்லை. மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது குதூகலம் எனது வியர்வை முழுவதையும் துடைத்துப் போட்டு உற்சாகப் படுத்தியது.

அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது தவறுதான். அதுவும் இளைய தம்பதியரின் உரையாடலைக் கேட்பது என்பது தவறோ தவறு. ஆனாலும் இவர்கள் பேசுவது தானாகவே உள்ளேறியது.

ஒரு இடத்தில்,

இங்க இருந்து போறப்ப ஆன காச விட வாரப்ப ஆகிற பேருந்து கட்டணம் அதிகம் என்பதாக அந்தப் பெண் கூறவே, அதெப்படி போக ஒரு காசு வார ஒரு காசு ஆகும் என்று அந்தப் பையன் சொன்னார். இதே உரையாடல் பலமுறை தொடர்ந்தது.

அந்தப் பெண் கணக்கெல்லாம் சொல்லி நிறுவ முயன்றபோது அந்தப் பையன் சொன்னார்,

“போறதுக்கு கொறச்ச வாரதுக்கு அதிகம்கிற, சரிவிடு இனி போறதோட நிறுத்திக்குவோம், வர வேண்டாம்”

அந்தப் பெண் வெட்கத்தோடு அவரை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே அவரது தொடையில் அதைவிடவும் வெட்கத்தோடு தட்டினார். நான் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கம் இன்னும் அதிகரித்தது.

” அந்த அண்ணனுக்கும் சிப்ஸ் கொடுப்பா. எடுத்துக்கண்ணா”

எடுத்துக் கொண்டேன்.

ரெண்டு பேரும் இப்படியே மகிழ்ந்து நீண்டு வாழ வேண்டும்.

7 comments:

  1. அந்த தம்பதியரின் மகிழ்வு தொடரட்டும்! நன்றி!

    ReplyDelete
  2. ஆஹா ...இனிய தாம்பத்யம்...

    ReplyDelete
  3. இது போன்ற சின்ன சின்ன மகிழ்வுகள்தான் வாழ்வின் இனிமை

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் எழில். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...