Thursday, March 31, 2016

புரிய வையுங்கள்

திருமதி பிரேமலதா மற்றும் சதீஷ் போன்றோரை நெறிப்படுத்தவேண்டிய தங்களது பொறுப்பினை மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் தட்டிக் கழிக்கக் கூடாது என்று தோன்றுகிறது.
திரு விஜயகாந்த் என்பவர் தனது ஓட்டுவங்கியைத் தவிர வேறு எந்த விதத்திலும் மக்கள்நலக் கூட்டணியின் தலைவர்களைவிட உயர்ந்தவரல்ல. அல்லது இப்படி வேண்டுமானால் சொல்கிறேன் மக்கள் நலக் கூட்டணித் தலைவரில் எவரும் அவரைவிட தியாகத்திலோ செயல்பாட்டிலோ அறிவிலோ குறைந்தவர்கள் அல்ல.
அதிலும் குறிப்பாக திருமதி பிரேமலதா அவர்களின் உரைகளை நெறிப்படுத்துதல் அவசியம். ஏதோ விஜயகாந்த் அவர்கள் அவதாரப் புருஷர் என்ற கணக்கில் நீளும் அவரது உரை தற்செயலானது என்று தோன்றவில்லை.
செயல்திட்டமே அனைத்தைம் வழிநடத்தும் என்பதை தயவுசெய்து புரிய வையுங்கள்.

இன்சினரேட்டர் incinerator

பள்ளிக் குழந்தைகளுக்கு நேப்கின் வழங்கும் தமிழக அரசை பள்ளிக் குழந்தை ஒருத்தியின் தகப்பன் என்ற முறையில் நன்றி சொல்கிறேன்.
இலவச நேப்கின் குழந்தைகளை சுகாதாரத்தோடும் தன்னம்பிக்கையுடனும் செயயல்பட வைத்திருக்கிறது.
ஆனால் பயன்படுத்தப்பட்ட நேப்கின்களை எரித்து அழிக்கும் எந்திரம் ஒவ்வொரு பள்ளிக்கும் அவசியம். அரசே அதனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

அருப்புக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அந்த எந்திரம் ஒன்றினை அன்பளிக்க நண்பர்கள் முன்வந்திருக்கிறார்கள்.
இரண்டில் விஷயங்கள் தேவைப்படுகின்றன
1 அந்த எந்திரம் எங்கு கிடைக்கும்?
2 என்ன விலை?

65/66 காக்கைச் சிறகினிலே ஏப்ரல் 2016

நடைமுறைபடுத்தவே முடியாத தடைகளை இத்தனை பத்து ஆண்டுகளாக அமெரிக்கா கியூபாமீது விதித்திருக்கிறதுஎன்று சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் திரு ஒபாமா அவர்கள் கூறியபோது உள்ளபடியே அப்படி ஒரு மகிழ்ச்சி அப்பிக்கொண்டது. இவ்வளவு கொண்டாடி விடாதே எட்வின். இதில் எத்தனை உள்குத்தும் உள்நோக்கமும் இருக்கிறதோ என்று சில நண்பர்கள் கூறினார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனாலும் நான் அதை கொண்டாடவே செய்தேன்.

திரு மண்டேலா அவர்களின் இறுதி நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். மேடையில் ஒபாமா ஏறியபோது கியூபா அதிபர் திரு ரால் அவர்கள் எழுந்துநின்று மிஸ்டர் ப்ரெசிடெண்ட் என்று நீட்டிய கரங்கள் ஒருவிதமான உதாசீன மனோபாவத்தோடு குலுக்கி அலட்சியமாக நகர்ந்தார் ஒபாமா. அதுமட்டுமல்லஒபாமாவோடு ரால் கை குலுக்கிவிட்டதால் மாத்திரம் இருநாடுகளின் உறவுநிலையில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை மிகுந்த அலட்சியத்தோடுஅறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

இந்த அறிக்கைக்கு சில காலம் கழித்துதான் ஒபாமா அவர்கள் மேலே கண்டுள்ள அபிப்பிராயத்தை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில்கூட கியூபாவின் நலன் குறித்து எதுவும் இல்லைதான். கியூபாவின்மீதான அமெரிக்காவின் தடை என்பது நடைமுறை படுத்த இயலாத ஒன்று என்ற வகையிலேயே அதிபரின் அறிக்கை இருந்தது. அது அமெரிக்காவின் கியூப நிலைபாட்டின் மீதான சுய பரிசீலனையாக இருந்தது.

தன்னால் நடைமுறைபடுத்த முடியாத ஒரு காரியம் என்பதை அமெரிக்கா ஒத்துக்கொண்டதே நடைமுறையில் எங்கும் பார்க்க இயலாத விஷயம்.

கியூபாவின் நலன்குறித்த அக்கறை கொள்ளாத ஒரு அறிக்கையை கொண்டாடியதற்கு காரணம் இருந்தது. கியூபாமீதான தடையை நீக்குவதைத் தவிர அமெரிக்காவிற்கு வேறு வழியே இல்லை என்ற எதார்த்தத்தை ஒபாமாவின் அறிக்கை தெளிவுபடுத்தியது.

இந்தத் தடையினால் அன்பும் மனிதாபிமானமும் நிறைந்த கியூப மக்களை எவ்வளவு சிரமப் படுத்தியது என்பது சொல்லி மாளாது. அத்தனைக்கு மத்தியிலும் உலகின் எந்தப் பகுதியில் எந்த மாதிரியான பேரிடர் நிகழ்ந்தாலும் கியூப மருத்துவர்களின் தியாகம் செரிந்த பங்களிப்பை தொடர்ந்து நம்மால் பார்க்க முடிந்தது.

இன்னொரு விஷயத்தையும் நாம் பரிசிலீக்க வேண்டும். அமெரிக்க மருத்துவம் அற்புதமானது. அதி நவீனமானது. ஆனால் அது அமெரிக்க ஏழைகளுக்கே எட்டாதது. அவ்வளவு செலவு பிடிக்கக்கூடியது. ஏழை அமெரிக்க மக்களுக்கு கண்புறை அருவை சிகிச்சையே இயலாத ஒன்றாக இருந்தது. கியூபா ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தகைய ஏழை அமெரிக்க மக்களை அழைத்து சென்று அவர்களுக்கு இலவசமாக கண்புறை அறுவை சிகிச்சையை செய்து பிறகு அமெரிக்க கொண்டுவந்து விடுவதை வழக்கத்தில் கொண்டிருந்ததாக நான் எங்கோ வாசித்திருக்கிறேன்.  

ஆக தன்மீது தடைவிதித்திருந்த நாட்டின் ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்த மக்கள் கியூப மக்கள். இன்னொன்றையும் சொல்ல வேண்டும் அமெரிக்க மக்களும் கியூப மக்கள்மீது அப்படி ஒரு அன்போடு இருப்பவர்கள்தான்.

நமது அமெரிக்க எதிர்ப்பு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடுதானே தவிர அமெரிக்க மக்களோடு அல்ல.

எண்பத்தி எட்டு ஆண்டுகளுக்குபிறகு ஒரு அமெரிக்க அதிபர் கியூபா சென்றிருக்கிறார். கியூப மண்ணை மிதிப்பதற்கே அமெரிக்க அதிபர் ஒருவருக்கு துணிச்சல் வேண்டும். அமெரிக்க வல்லூறுகளின் கடுமையான எதிர்ப்பை அவர் இதற்காக சந்திக்க நேரிடும். அவரது பதவிக்காலம் முடிவைவதால் இந்த்த் துணிச்சல் வந்திருக்கலாம் என்ற விமர்சனத்தையும் நிராகரிக்க வில்லை.

ஆனால் அதிபரின் இந்தப் பயணம் இரு நாட்டு மக்களிடத்தும் மகிழ்வையும் தோழமையையும் உருவாக்கும் என்ற உண்மையும், கியூப மக்களை கட்டிப்போட்டிருந்த தடை விலகும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் அனைத்து துறைக்களிலும் பாய்ச்சலை நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

இந்தச் சந்திப்பு கியூப கட்டுமானத்தை இம்மியளவும் மாற்றிவிடாது என்ற திரு ரால் அவர்களின் உறுதி மகிழ்ச்சியைத் தருகிறது.

தோழர் ராலுக்கும் கியூப மக்களுக்கும் எங்களது அன்பும் மகிழ்ச்சியும்.

வெனிசுலா மற்றும் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகள், மற்றும் அனைத்து நாடுகள் குறிப்பாக வளைகுடா நாடுகள்மீதான அமெரிக்காவின் அணுகுமுறையை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு உங்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
***************************************************** 
**************************************

கோட்சே தனது வாக்குமூலத்தில் இந்திய சுதந்திரம் பெற்றதற்கு காந்தியின் பங்களிப்பு ஏதுமில்லை என்று கூறியவன்  சுதந்திரத்திற்கு காரணமானவர்கள் என்று பட்டியல் ஒன்றைத் தருகிறான். அதில் என்.சி.கேல்கர், இந்து சபாத் தலைவர்கள் போன்றோரைக் குறிப்பிடும் அவன் மதிப்பிற்குரிய சர்தார் படேல் அவர்களின் சகோதரர் விதல்பாய் படேல் என்று வல்லபாய் படேலுக்கு அழுத்தம் தருவதை தோழர் அருணன் அவர்கள் கோட்சேயின் குருமார்கள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கோட்சேயின் மரியாதைக்குரியவராக படேல் இருந்ததே நமக்கு அவர்மீதான மரியாதையை குறைத்திருந்தது.

1948 ஜனவரி 14 அன்று பிர்லா மாளிகையில் உண்ணாவிரதம் இருந்த மகாத்மாவை படேல் சந்திக்கிறார். பாகிஸ்தானுக்குரிய பங்கான 55 கோடி ரூபாயை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற  காந்தியின் கோரிக்கையை முரட்டுத்தனமாக நிராகரிக்கிறார். காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளையும் இந்தப் பணப்பிரச்சினையையும் வேறு வேறாக தன்னால் பார்க்க முடியாது என்று அவர் சொல்கிறார். நொந்துபோன காந்தி படேலின் முகத்துக்கு நேராகநான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்லஎன்று கூறுகிறார். அநேகமாக காந்தி படேலிடம் இறுதியாக கூறிய வார்த்தைகள் இவையாகத்தானிருக்கும்.

காந்தியின் கொலை குறித்த நேருவிற்கும் படேலுக்குமான கடிதவழி உரையாடலும் தோழர் அருணனின் அதே நூலில் இருக்கிறது. நேரு காந்தியின் கொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இயங்கி இருக்கிறது என்று கூறுகிறார். ‘ தீவிர உணர்ச்சி தந்த அழுத்தத்தில் ஒருவன் செய்த செயல்என்று காந்தியின் கொலையை முடிக்கிற படேலை அங்கே பார்க்கிறோம்.

இப்படியாக படேலைப் பற்றிய எதிர்மறை பிம்பங்களையே அறிந்திருந்த நமக்கு அவரது இன்னொரு முகத்தை தோழர் திருமாவளவன் காட்டுகிறார். 9.3.2016 அன்றைய தனதுதி இந்துகட்டுரையில் 1932 செப்டம்பர் 24 அன்று உருவான புனா ஒப்பந்தத்தில் படேல் அவர்களின் பங்கு அழுத்தமானது என்று குறிப்பிடுகிறார். “ஒடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆட்சியதிகாரங்களிலும் கொடுக்கப்படவேண்டிய பங்குகள் எவ்வித தடையுமின்றி வழங்கப்படும்”  என்பதே அந்த ஓப்பந்தத்தின் சாரம்.

பிறகு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான அவையில் பேசும்போதுஇந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் இன்னும் பாதுகாக்கப் படவில்லை. நாம்தான் அவர்களின் அறங்காவலர்கள்.புனே ஒப்பந்தத்தின் படி இதற்கான வாக்குறுதியை நாம் அளித்திருக்கிறோம். அந்த வாக்கூறுதியை நாம் நிறைவேற்றியிருக்கிறோமா? அந்த வகையில் நாம் குற்றம் இழைத்தவர்கள் ஆகிறோம்.” என்று பேசுகிறார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக பேசும் படேல் இதுவரை பலர் அறியாதது.

இங்கும் ஒன்றை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இங்குகூட அவர் அனைவரும் ஒன்றெல்லாம் கூறவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கான அறங்காவலர்களாகவே அவர் தம்மையும் ஆதிக்க மற்றும் இடைசாதி சமூகத்தைப் பார்ப்பதையும் நாம் கண்டுகொள்ளத் தவறக்கூடாது . அதே சமயம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறிய வருத்தம் அவரது குரலில் இருப்பதையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப் பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்ட்தாக படேலால்கூட ஒத்துக் கொள்ள இயலவில்லை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.
***********************************************************

பதிப்பகம் துவங்கி முதல் நூலையும் கொண்டு வந்திருக்கிறோம். குரூஸ் அவர்களின்அஸ்தினாபுரம்என்ற நாவல் அச்சாகி வந்து விட்டது. 26.03.2016 அன்று மாலை சென்னை இக்சா அரங்கில் வெளியிடுகிறோம்.

வரும் சென்னை புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்.

காக்கையை அனைத்து தரப்பினரும் கொண்டாடுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. மகிழ்ச்சி உந்தித் தள்ளுகிறது. ஐம்பத்தி சொச்சம் இதழ்களில் நிறைய படைப்பாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறோம். நமது இதழில் வெளிவந்த கட்டுரைகளை பல நாளிதழ்கள் எடுத்து வெளியிட்டிருக்கின்றன.

எல்லாம் சரி, காக்கை தொடர்ந்து பறக்க இவற்றோடு சந்தாவும் அவசியம் என்பதை உணரவேண்டுமாய் தோழர்களை அன்போடு வேண்டுகிறேன்.
*************************************************** 
 




Wednesday, March 30, 2016

உரத்து எதிர்ப்போம்.

முன்னெல்லாம் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வவுத்த ரொப்பிப்புட்டு கட்டிக்கமாட்டேன்னு சொனாதாம்பா கொல செய்வாய்ங்க. இப்பல்லாம் என்னடான்னா கல்யாணமே ஆயிருந்தாலும் பரவாயில்ல வவுத்துல புள்ள இருந்தாலும் பரவாயில்ல புள்ளைய வுட்டுடுங்கறாய்ங்க. இல்லாட்டி கொல்ராய்ங்கப்பா. இவிங்களும் இவிங்க சாதிநாட்டாமையும் நாசமாப் போகட்டும்என்று பேருந்தில் ஒரு பெரியவர் அறற்றி புலம்பி தன் எதிர்வினையை பதிந்துகொண்டிருந்தார்.

ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே கொலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. குவியல் குவியலாய் கொலைகள் செய்யப்பட்டால் அதற்கு போர் என்று பெயர். வரலாறு, இதிகாசம், புராணங்கள், வேதப் புத்தகங்கள், இலக்கியம் என்று எல்லா இடங்களிலும் கொலைகள் குறித்த பதிவுகள் விரவியே கிடக்கின்றன. ஆக கொலைகள் நமக்கு பழக்கமானவைதான். கொலைகளுக்கான காரணமும், செய்யப்படும் விதமும், கொலைக்குப் பிறகான கொலையாளிகளின் திமிர்த்தனமான அளப்பறைகளும் நாம் வாழும் சமூகம் குறித்தான கவலையையும் அச்சத்தையும் நமக்களிக்கின்றன.

முன்பெல்லாம் கொலைகுறித்த திட்டமிடலின்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடமாகத்தான் தேர்வு செய்தார்கள். காரணம் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியென்றால் கொலையை யாரேனும் பார்த்துவிடக் கூடும். பார்த்தவர் சாட்சியமளித்தால் தனக்கு தண்டனை கிடைக்கக் கூடும். கொலைகாரனுக்கும் போலீஸ் குறித்தும் சிறை குறித்தும் ஒருவிதமான பயம் இருந்தது. சாட்சிகள் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பயம் இருந்தது.

கொலை நடந்துவிட்டால் ஒன்று அதற்கு எதிராகத்தான் எல்லோரும் பேசுவார்கள் அல்லது பேச பயந்துகொண்டு பேசாமல் இருப்பார்கள்.

ஆனால் சமீபத்தில் உடுமலைபேட்டையில் நடந்த இளைஞன் சங்கரின் கொலை அது நடத்தப்பட்ட முறையால் அனைத்து கொலைகளிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது.

கொலை நடந்த இடம் நட்டநடு சாலை. சுள்ளென கொளுத்தும் வெயில் பொழுது. ஏறத்தாழ நூறுபேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சற்றேரக்குறைய இருநூறுக் கண்களை சாட்சியாக வைத்து கொலை நடந்திருக்கிறது. கொலையை செய்த யாரும் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொள்ளவில்லை. சுவைக்க சுவைக்க ஊதி ஊதி தேநீர் குடிப்பது மாதிரி ரசித்து ரசித்து வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் பிள்ளையை.

எந்த அசைவும் பார்வையாளிடம் இல்லை. ஒரு சத்தம், ஒரு கல்லெறிதல் என்று எந்தவிதமான எதிர்ப்பும் அந்தக் கொலைக்கு இல்லை. இந்தவிதமான சமூகக் கட்டமைப்புதான் நமக்கு எரிச்சல் கலந்த கவலையைத் தருகிறது. திரண்டுநின்ற அந்தக் கூட்டம் சிலிர்த்திருந்தால் அந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியும்.

சாதி மனிதர்களைத் தின்றுகொண்டே இருக்கிறது.

மகள் வெட்டப் படுவதை ஒரு காரினுள் இருந்து அவளது தந்தை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற செய்தி சகலவிதமான நம்பிக்கைகளையும் தகர்த்துப் போட்டு நம்மை உறைய வைக்கிறது.

இதுகுறித்து கேட்கப்பட்டபோது மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்கள்அவனவனும் அவனவன் ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டால் ஏன் பிரச்சினை வருகிறது?’ என்று கேட்கிறார்.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அருவாளோடுஎங்கசாதிப் பொண்ண வேறசாதிக்காரன் கல்யாணாம் செய்தால் வெட்டுவோம்டாஎன்று கூறுகிறார்கள். இந்த இரண்டிற்கும் நமக்கு பெரிதாய் வேறுபாடு தெரியவில்லை.  

நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் மௌனம் காக்கின்றன.

நாம் நம் மௌனம் கலைத்து உரத்து எதிர்ப்போம்.


நன்றி: காக்கைச் சிறகினிலே 

23 வகுப்பிற்கு ஒரு ஆசிரியர்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் பத்திரிக்கைகளில் வந்த செய்தி என்னை சுக்குநூறாக்கியது. ஒரு ஆசிரியனாய் கூனிக் குறுகிப் போனேன். பார்க்கிற யாரும் அதுபற்றி பேசத் தொடங்கிவிட்டால் எப்படி ஜமாளிப்பது என்ற தயக்கத்தோடேயே அன்றையப் பொழுதை கழித்தேன். நல்ல வேளையாக தேர்தல் கூட்டணி எப்படிப் போகும், விஜயகாந்த் எந்தப் பக்கம் நகர்வார் என்பதிலேயே மக்கள் தீவிரமாக இருந்ததால் சேதப்படாமல் தப்பித்தேன்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் நிலைதடுமாறி கீழே சரிந்திருக்கிறார். குழந்தைகள் சிலர் தங்களது வீடுகளுக்கு பதறியபடி ஓடி தங்களது பெற்றோர்களிடம் தங்களது தலைமை ஆசிரியர் கீழே விழுந்து கிடக்கும் விவரத்தை சொல்லியிருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியருக்கு என்ன ஆனதோ என்று பதைபதைத்தபடியே சில பெற்ரோர்கள் பள்ளிக்கு ஓடி வந்திருக்கிறார்கள். வீசிய நெடி அவர்களுக்கு உண்மையை சொன்னது. தண்ணீர் தெளித்து கொஞ்சம் படுக்க வைக்கலாம் என்று சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களில் ஒருவர் கல்வித்துறை அதிகாரிக்கு விஷயத்தை புகார் செய்கிறார்.

சற்று நேரத்திற்கெல்லாம் கல்வித்துறை அதிகாரி வந்து சேர்கிறார். நிறைய விசாரிக்க வேண்டிய அவசியமெல்லாம் அவருக்கு இருக்கவில்லை. அவரது உயரதிகாரியோடு ஆலோசிக்கிறார். அவரது ஆலோசனையின் பெயரில் அந்த்த் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்கிறார். அத்தோடு அந்தப் பிரச்சினையை நாளேடுகள் முடித்துக் கொள்கின்றன.

காலம் கெட்டுப் போச்சு. வாத்திக பள்ளிக்கூடத்துல போயி பைனான்ஸ் வேலையத்தான் பாக்குறாய்ங்கன்னு பார்த்தோம். இப்ப குடிச்சிட்டே பள்ளிக்கூடத்துக்கு போக ஆரம்பிச்சுட்டாய்ங்க. இனி வெளங்கன மாதிரிதான்என்பதுமாதிரி ஒருநாள் ஆசிரியர்களை நக்கலடித்துவிட்டு மனதிருப்தி அடைந்துபோயினர் பொதுமக்கள் வழக்கம்போலவே.

எனக்கிருக்கிற கவலை எல்லாம் இருந்த ஒரு ஆசிரியரும் குடித்துவிட்டு வந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அன்றைக்கு அந்த பள்ளி தொடர்ந்து நடைபெற்றதா? என்பது பற்ரித்தான். ஒருக்கால் அன்றைய தினம் தொடர்ந்து பள்ளி நடந்தது எனில் எப்படி?

ஆசிரியர்களின் நடத்தை குறித்து பொதுமக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதே என்னைப் பொறுத்தவரை ஆசிரியன் என்கிற முறையில் மரியாதைக்குரிய மகிழ்ச்சிதான்.

மதுவின் தீமைகுறித்து மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி மதுவிற்கு எதிராக மாணவர்களை நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல நெறிகளை மாணவர்களுக்கு தமது வாழ்க்கையின் மூலம் கற்றுத்தருவதுதான் வரவேற்கத் தக்கது.

எந்தப் பணியில் இருப்பவர் ஆயினும் ஒருவர் போதையோடு தனது பணித்தளத்திற்கு செல்வதை ஏற்க இயலாது. ஆசிரியர் பள்ளிக்கு போதையோடு வருவது என்பதை ஏற்கவே இயலாது. அதுவும் ஒரு தலைமை ஆசிரியருக்கு ஆசிரியரைவிடவும் சற்று கூடுதலான பொறுப்பு இருக்கிறது. நிலை தடுமாறி சாயுமளவிற்கு ஒரு தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்திருக்கிறார் என்றால்பணியிடை நீக்கம்என்பதே மிக மெல்லிய தண்டனைதான். விளையாட்டில் கூட ஊக்க மருந்து உட்கொண்டிருப்பது நிரூபிக்கப் படுமானால் ஆயுளுக்கும் விளையாட முடியாது. ஆனால் தற்போதுபணியிடை நீக்கம்செய்யப்பட்டிருக்கும் இந்த தலைமை ஆசிரியர் சிறிது காலத்திற்குப் பிறகு நிச்சயமாக பணிக்குத் திரும்பி விடுவார்.

தவறு செய்பவனை ஓரிரு நாட்கள் நக்கலடிப்பதோடு திருப்தி பட்டுக்கொள்ளும் பொது ஜனத்தின்மீது எனக்கு கோவம் கோவமாய் வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் சொல்லித் தரவேண்டிய ஆசிரியர் ஒழுங்கீனத்தின் உச்சநிலையில் பள்ளிக்கு வந்திருக்கிறார். அவரை பணிநீக்கம் செய்யும்வரை ஓயாது போராடியிருக்க வேண்டும். தங்கள் குழந்தைக்கு யோக்கியமான ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் போராடியிருக்க வேண்டும்.

அன்றைய தினம் தொடர்ந்து பள்ளி நடைபெற்றதா என்ற எனது கவலைக்கு காரணமிருக்கிறது. எல்லா அச்சு ஊடகங்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அந்த மனிதரைதலைமை ஆசிரியர்என்றே குறிப்பிடுகின்றன. அதுவே மிகவும் தவறு என்பதை பொது ஜனங்கள் முதலில் உணர வேண்டும். தலைமை ஆசிரியர் என்றால் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் எத்தனை பேர்? அந்தப் பள்ளிக்கூடத்தில் அவரைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் பணியாற்றவில்லை. துணைக்கு ஒரு ஆசிரியர்கூட இல்லாத நிலையில் அவரை தலைமை ஆசிரியர் என்று அழைப்பது எப்படி சரியாகும்?


இப்போது அநேகமாக ஓராசிரியர் பள்ளிகள் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாப் பள்ளிகளுக்கும் இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனவே தவிர இரண்டு ஆசிரியர் பணியிடங்களும் எல்லாப் பள்ளிகளிலும் நிரப்பப்பட்டிருக்கின்றனவா என்றால் பெரும்பான்மைப் பள்ளிகளில் இல்லை.  

ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை உள்ள அத்துனை குழந்தைகளுக்கும் அவர் ஒருவரே ஆசிரியர். அவர் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் அந்த நேரத்தில் என்ன செய்வார்கள்? இரண்டு ஆசிரியர்கள் இருந்தாலும் ஏதோ இரண்டு வகுப்பு மாணவர்களைத்தானே கவனிக்க இயலும். மற்ற மூன்று வகுப்பு குழந்தைகள் என்ன செய்வார்கள்.

குழந்தைகள் குறைவாகத்தானே இருக்கிறார்கள். அனைத்து குழந்தைகளையும் ஒருவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் என்கிற உண்மையை பெற்றோர்கள் உணர்ந்துள்ளனரா என்பது தெரியவில்லை.

இப்போதெல்லாம் அடிக்கடி பணியிடைப் பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு நடக்கின்றன. போதாக்குறைக்கு வாரத்திற்கு இரண்டு நாட்களேனும் ஏதேனும் தகவல்களை அதிகாரிகள் கேட்பார்கள். அதை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு ஆசிரியர்கள் போக வேண்டும்.

இந்தப் பள்ளியும் ஈராசிரியர் பள்ளிதான். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரும் அவரது மனைவியும் இங்கு பணியாற்றி வந்திருக்கிறாரள். என்ன காரணத்திற்காகவோ இவரது மனைவி வேறு ஒரு பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப் பட்டிருக்கிறார். அதிலிருந்து அவரது பணியிடம் காலிப் பணியிடமாகவே வெகுகாலமாக அந்தப் பள்ளியில் இருக்கிறது.

 தனது கால் முறிந்து இருப்பதாகவும், அதற்கான தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் அந்தத் தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார். மாற்று ஆசிரியர் இல்லாத காரணத்தால் தன்னால் விடுப்பு எடுக்க இயலவில்லை என்றும் மிகுதியான கால்வலியோடு பள்ளிக்கு வரவேண்டி இருந்ததால் வலிமறப்பதற்காக குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எதன்பொருட்டே ஆயினும் குடித்துவிட்டு போதையோடு பள்ளிக்கு வந்ததை யாராலும் ஏற்க இயலாது.

ஆனால் ஆத்திர அவசரத்திற்கு இதுமாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களால் விடுப்பு எடுக்க இயலாது என்கிற சிரமத்தை நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும். இதுமாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாரேனும் தங்களது நெருங்கிய உறவினரின் மரணாத்தின் பொருட்டு விடுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டால்கூட அருகில் உள்ள பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களில் ஒருவரை இங்கு மாற்றுப் பணிக்கு ஏற்பாடு செய்தால்தான் விடுப்பு சாத்தியப் படும். அருகில் உள்ள பள்ளியின் ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தாலோ அல்லது அந்தப் பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்தாலோ எதன்பொருட்டும் இவரால் விடுப்பு எடுக்க முடியாது.

கால்வலி மறப்பதற்காகத்தான் மது அருந்தியதாக அவர் சொல்வதை நம்மால் ஏற்க முடியாது. ஆனால் கால் ஒடிந்திருந்தாலும் உயிர்போகும் வலி இருந்தாலும் மாற்றுப் பணிக்கு ஆள் இல்லாத பட்சத்தில் அந்த வலியோடே பள்ளிக்கு வந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது வன்முறை அல்லவா


யாரேனும் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்தால் அவரது வகுப்பையும் சேர்த்து ஒருநாள் முழுக்கப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான காரியம். வருடம் முழுவதும் காலை முதல் மாலைவரை ஐந்து வகுப்புகளையும் ஒரே இடத்தில் அமரவைத்து ஒரு ஆசிரியரே பாடம் நடத்துவது என்பது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.

வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கக் கோரினால் ஒரு ஆசிரியருக்கே மாணவர்கள் இல்லை இதில் ஐந்து ஆசிரியர்களை எப்படி நியமிப்பது என்று திருப்பி கேட்கிறார்கள். இதில் மாணவர்களின் எண்ணிக்கையை அளவுகோலாக வைப்பதே அயோக்கியத்தனமான அபத்தம். மாணவர்களின் எண்ணிக்கை ஆசிரியர் பணிநியமனத்தின் போது ஏன் பார்க்கப் பட்டது என்றால் ஒரு ஆசிரியருக்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் பட்சத்தில் அந்த வகுப்பை ஒரு ஆசிரியரால் நிர்வகிக்க இயலாது. எனவே ஒரு அளவிற்கு அதிகமாக மாணவர்கள் சேர்ந்துவிடும்போது அந்த வகுப்பை இரண்டாகப் பிரித்து ஆசிரியரின் சுமையைக் குறப்பதற்கும் கல்வித் தரத்தை பாதுகாப்பதற்காவும்தான்.

ஒரு வகுப்பில் அதிகபட்சமாக இவ்வளவு மாணவர்கள்தான் இருக்க வேண்டும் என்பதற்காக நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு காலப்போக்கில் குறைந்த பட்சம் இவ்வளவு மாணவர்கள் இருந்தால்தான் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும் என்று திரிந்து போனது.

இதை மாற்றுவதற்கு சாத்தியமே இல்லை. நிதிச்சுமையை தாங்க இயலாது என்று சொல்பவர்களுக்கு நாம் அவர்களே அடிக்கடி விய்ந்து கொண்டாடும் நாளந்தாவை உதாரணமாகக் காட்டுவதற்கு கடமை பட்டிருக்கிறோம்.

பொதுவாகவே இந்தியாவின் கல்வி மேன்மையை சொல்ல விரும்பும் யாவரும் நாளந்தாவைப் பற்றி எடுத்துச் சொல்லாமல் நகர்வதே இல்லை. வாகன ஏற்பாடுகள் அறவே இல்லாத அந்தக் காலத்தில் நாளந்தாவில் பத்தாயிரம் மாணவர்கள் படித்ததாக கூறுவார்கள்.

இரவு வகுப்புகள் நடந்தன அந்தக் காலத்திலேயே என்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்திலேயே ஆசிரியர்கள் தியாக சிந்தனையோடு தீப்பந்த வெளிச்சத்தில் கற்றுத் தந்திருக்கிறார்கள்இப்போது எல்லா வசதியும் இருக்கிறது. ஆசிரியர்கள் கொஞ்சம் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சொல்லித்தரக் கூடாதா என்று கல்வித்துறை அதிகாரிகள் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே பத்தாயிரம் மாணவர்களை சேர்த்திருக்கிறார்கள் என்றால் இப்போது ஏன் முடியாது. ஆசிரியர்கள் பொறுப்போடு உழைத்தால் அது சாத்தியப்படும் என்பதாக ஏதோ இதில் அதிகாரிகளுக்கு பொறுப்பே இல்லை என்று தொண்டை வலிக்கும்வரை பேசித் தீர்க்கும் கல்வித்துறை அதிகாரிகளை எனக்குத் தெரியும்.

நொடிக்கு நூறுதரம் பத்தாயிரம் மாணவர்கள் படித்தார்கள் என்பதை பேசும் இவர்கள் அங்கே எத்தனை ஆசிரியர்கள், எத்தனை ஊழியர்கள் வேலை பார்த்தார்கள் என்ற விவரத்தை மட்டும் சொல்லவே மாட்டார்கள்.

பத்தாயிரம் மாணவர்கள் படித்த நாளந்தாவில் மூவாயிரம் ஆசிரியர்களும் இரண்டாயிரம் ஆசிரியரல்லாத ஊழியர்களும் பணிபுரிந்திருக்கிறார்கள். அதாவது பத்தாயிரம் மாணவர்களுக்கு மூவாயிரம் ஆசிரியர்கள் என்றால் ஆயிரம் மாணவர்களுக்கு முன்னூறு ஆசிரியர்கள். தெளிவாய் உடைத்தால் ஒவ்வொரு மூன்று மாணவனுக்கும் ஒரு ஆசிரியர், ஒவ்வொரு ஐந்து மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியரல்லாத ஊழியர்.

இரண்டு மூன்று கிராமங்களின் மொத்த வருவாயைக் கொட்டி நாளந்தாவை கட்டமைத்திருக்கிறார்கள்.


நாளந்தாவைப் போல மூன்று மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரைக்கூட நாம் கேட்கவில்லை. வகுப்பிற்கு ஒரு ஆசிரியராவது ஒதுக்குக்குங்கள் என்றுதான் கேட்கிறோம். பள்ளிக்கு குறைந்தபட்சம் ஒரு ஊழியராவது அவசியம் என்றுதான் கோருகிறோம். இந்த கோரிக்கைகள் நியாயம் என்பதை உணர்து கொள்ளும் அரசொன்று வாய்க்காதா என்று ஏக்கமாக இருக்கிறது.         

Tuesday, March 29, 2016

மேகே தாட்டு


இந்தப் படத்தைக் காட்டி இது என்னவென்று கேட்டால் பெரும்பான்மையோர் இது ஏதோ ஒருவாய்க்கால் என்றோ அல்லது சின்ன நதி என்றோ சொல்லக் கூடும்.

இது காவிரி. சத்தியமாய் இது காவிரி.

நம் தமிழ் மண்ணில் ”ஆடு தாண்டும் காவிரி” என்று சொல்வோமே. அந்த ஆடு தாண்டும் காவிரிதான் கன்னடத்தில் மேகே தாட்டு. மேகே என்றால் கன்னடத்தில் ஆடு  என்றும் தாட்டு என்றால் தாண்டு என்றும் பொருள்.

இங்குதான் ஒரு அணை கட்டுவதாக இருக்கிறது கர்நாடக அரசு. இதை எதிர்த்துதான் தமிழக விவசாயிகளும் மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏதோ தமிழர்கள் அணைகளுக்கு எதிரானவர்கள் என்றோ அல்லது அணைகளை கட்டி கர்நாடாகா வளம் பெற்றுவிடப் போகிறார்களே என்ற பொறாமையினாலோ தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தை கையெடுக்க வில்லை.

காவிரி தமிழ் மண்ணுக்கும் சொந்தமானது. ஏற்கனவே தமிழ் மண்ணுக்கு உரிய உரிமையை வழங்க மறுத்து கர்நாடகம் தகறாறு செய்து வருகிறது. எந்தக் கட்சி அங்கு ஆட்சிக்கு வந்தபோதும் இந்த நிலை அங்கு மாறுவதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு முன்னால் இருந்த ஆட்சி செயல்படுத்திய திட்டங்களை செயல் படுத்த தயக்கம் காட்டும். பி.ஜே.பி யும் அப்படித்தான்.

ஆனால் இரண்டு கட்சிகள் மட்டுமல்ல மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மண்ணுக்கு உரிய உரிமை நீரை வழங்குவதில்லை என்பதில் ஒற்றுமையோடு நிற்கின்றன.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே இன்னுமொரு அணையைக் கட்டுவதென்ற கர்நாடகத்தின் முடிவென்பது இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும்.

இது தடுக்கப்படா விட்டால் பையப் பைய இன்னும் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுக் காலத்தில் தமிழ்மண்ணின் ஒரு பகுதி பாலையாய்ப் போகும் அபாயம் இருக்கிறது.

இந்தப் போரட்டத்தை தமிழ் மண்ணிற்கெதிரான போராட்டம் என்று மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

இரண்டு மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பிரச்சினையில் கருத்து முரண்பாடோ தகறாறோ இருக்குமானால் மத்திய அரசு இருவரையும் அமர வைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பேச்சு வார்த்தை தோல்வியுற்றால் மீண்டும் அதைச் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் தோற்றால் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு இருவரையும் வலியுறுத்த வேண்டும். வழக்கு முடியும் வரை இருக்கும் நிலையிலேயே இருக்குமாறும் சற்றும் யாரும் முன்நகர்ந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். வழக்கு முடிந்துவிட்டால் நீதிமன்றம் சொல்வதை பாரபட்சமின்றி கறாராக செயல்படுத்துவதை கண்கானிக்க வேண்டும்.

தனது இந்தக் கடமையை செய்ய மறுக்கிறது மத்திய அரசு என்பதால்தான் அதை எதிர்க்கிறோம்.

விவசாயிகள் அழைப்பு விடுத்திருக்கும் இந்தப் போராட்டம் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறேன்.

Monday, March 28, 2016

ஜெயதேவனெனும் வற்றாத ஜீவநதி



நான் பிறந்தபோதே கவிதை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் ஜெயதேவன்.

பிறகு என்னோடு கவிதை எழுதியவர்.

எனக்கு அடுத்த தலைமுறையோடு கவிதை எழுதியவர்.

இப்போது இருபது வயது இளைஞர்களோடும் களத்தில் நிற்கிறார்.

அந்தந்தக் கால வார்ய்தைகளும் உத்திகளும் இவருக்கு லாவகமாய் வருகின்றன.

இவரோடு எழதத்தொடங்கியவர்களெல்லாம் ஓய்வுபெற்று விட்டார்கள். இளமையோடு எழுதுகிறார்.

 "அம்மாவின் கோலம்" என்ற இவரது கவிதை நூலை வெளியிட்டு பெருமை படுத்துகிறது எழுத்து அறக்கட்டளை.

கவிஞருக்கு வாழ்த்துக்கள்

அறக்கட்டளைக்கு நன்றி 

என்ன அப்பாவோ?



அன்று வீட்டிற்குள் நுழைந்ததும் "ஏம்பா ஆரஞ்சு வாங்கிட்டு வந்திருக்கலாம்ல" என்றாள் கீர்த்தி.

சரி என்று அடுத்தநாள் மறக்காமல் ஆரஞ்சு வாங்கி போனால் "ஏம்பா ஆரஞ்சு வாங்கி வந்தே'ங்கறா.



நீதானடி கேட்டன்னா, "அது நேத்திக்கு. இன்னிக்கு சப்போட்டா சாப்டனும் போல இருக்கு"ங்கறா.

என்ன புள்ளையோ... என்ன டேஸ்டோ என்று முனகினேன். வெடிக்கிறாள்,

"மகளுக்கு இன்னிக்கு என்ன புடிக்கும்னு தெரியாத ஆளெல்லாம் என்ன அப்பாவோ...?

Saturday, March 26, 2016

காய் விக்கறதுக்காக படிக்கச் சொல்லல



பெரம்பலூரில் வசுந்தரா என்றொரு காய்கறிக் கடை இருக்கிறது. குளிர்பதனப் படுத்தப் பட்டுள்ள அந்தக் கடையில் ஏறக்குறைய 20 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 20 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் 10 பேராவது இருப்பார்கள்.

நான் முதன்முறை அங்கு சென்று காய்களை வாங்கிவிட்டு பில் போடும் போது விலையைப் பார்த்தேன். மார்க்கெட் விலையை விட கொஞ்சம் கூடுதலாக இருந்தது.

இவ்வளவு கூட இருக்கேப்பா உங்களுக்காவது நல்ல சம்பளம் தருவார்களா? என்று கேட்டேன்.

அந்தக் குழந்தை சொன்னாள், “ எங்களை படிக்க வைக்கிறதே அவங்கதான் சார்”

ஆச்சரியத்தோடு பார்த்தேன். அந்தக் கடையில் உள்ள ஏறத்தாழ 10 பெண் குழந்தைகளும் ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள். சிலர் காலை ஷிஃப்ட். சிலர் மாலை ஷிஃப்ட். காலை ஷிட் கல்லூரி போகிறவர்கள் மதியம் கடையை பார்த்துக் கொள்கிறார்கள்.  மாலை ஷிஃப்ட் போகும் குழந்தைகள் காலையில் கடையைப் பார்த்துக் கொள்கிறார்கள். இரவில் அப்படியும் இப்படியுமாக கலந்தடித்து கடையினை கவனித்துக் கொள்கிறார்கள்.

தேர்விருக்கும் பிள்ளைகள் ஒதுங்கி படிக்கிறார்கள். செமஸ்டர் சமயத்தில் கடையில் அவர்களைப் பார்த்தால் “ உங்களை படிக்கிறதுக்குக்காகத்தான் காய் விக்கச் சொல்றது. காய் விக்கறதுக்காக படிக்கச் சொல்லல. போய் படி” என்பாராம். நெகிழ்ந்து போனேன்.

அடுத்தமுறை முதலாளியைப் பார்த்தேன். பிள்ளைகள் சொன்னதை அவரிடம் சொல்லி மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பதாக சொன்னேன். “ அப்படியா சொன்னாங்க.அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க சார், அவங்கதான் நமக்கு ஒரு பிசினச தறாங்க.” என்றார்.

இது நடந்து ஒரு வருடம் இருக்கும். எழுத நினைப்பேன் ஒவ்வொரு முறையும். தட்டிக் கொண்டே போகும். நேற்று ஒரு புதுக் குழந்தையை பார்த்தேன். என்னமா செய்ற என்ற போது MBA படித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். படிக்க சிரமப் படுவதைப் பார்த்த தோழி ஒருவரின் ஏற்பாடு என்றாள்.

நேற்றும் முதலாளி நின்று கொண்டிருந்தார். புன்னகையோடு அவரைக் கடந்தேன். ஏதும் பேசவில்லை அவரிடம். ஒருக்கால் பேசியிருந்தால் இதை எழுதியிருக்க மாட்டேனோ என்னவோ?

இனி நமக்கு வசுந்தராதான்.

Friday, March 25, 2016

அதுக்காக அஞ்சர மணி நேரமா நின்னுட்டு வருவ”



வழக்கம் போலவே கோயம்பேடு பேருந்து நிலையம் நிறைந்து கசிந்தது. இரக்கமுள்ள நட்த்துநர் ஒருவரின் பெருந்தன்மையால் ஒரு வழியாக இடம் கிடைத்தது. ஆனால் கறாராக சொன்னார்,

“திருச்சி டிக்கட் வாங்கிக்கங்க சார். துறை மங்கலத்தில் இறங்கிக்கங்க”

“ சரிங்க சார்”

அமர்ந்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம்  பேருந்து நிறைந்து விடவே புறப்பட்டது.

அஷோக் பில்லர் அருகேஒரு இளைஞன் ஏறினான். உள்ளே என் அருகே வந்தவன் எங்கும் இடமில்லை என்பதால் இறங்கி விடலாமா என்று தயங்கினான்.

நடத்துநர் சொன்னார்,

“எல்லா பஸ்ஸும் கூட்டம்தான். பேசாம வாப்பா. இதோ துறை மங்கலத்துல சார் இறங்கிடுவார். உட்கார்ந்துக்கலாம்.”

பையனுக்கு திருப்தி.

பயணச்சீட்டு எல்லாம் போட்டு முடிந்ததும் நடத்துநர் அவனை ட்ரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் உட்கார அழைத்தார்.

“ பரவாயில்லீங்க சார். சார் இறங்கியதும் இங்கயே உட்கார்ந்துக்கறேன்”

சொன்னார்,

“அது சரிப்பா. அதுக்காக அஞ்சர மணி நேரமா நின்னுட்டு வருவ”

புத்திர சோகம் கொடுமையானது.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் நண்பர்களின் பிள்ளைகள் மற்றும் நண்பர்களது நண்பர்களின் பிள்ளைகள் என்று நான்கு பேர் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் எதிர் வந்த இரு சக்ககர வாகனங்களோடு நேருக்கு நேர் மோதி இறந்திருக்கிறார்கள்.

அனைத்து விபத்துக்களுமே பெருநகரங்களில்தான் நிகழ்ந்துள்ளன.  போவதற்கும் வருவதற்கும் தனித்தனியாக பாதைகள் உள்ளபோது ஏனிப்படி?

கொஞ்ச தூரம் போய் முறையாக யூ டர்ன் எடுத்து திரும்புவதற்கு சோம்பேறித்தனம் கொள்வதாலேயே இது மாதிரியான விபத்துக்கள் நிகழ்கின்றன.

போக, அதிக வேகம், மூன்று பேர் நான்கு பேர் போவது, கவனத்தை சாலையில் வைக்காமல் அலட்சியமாக போவது என்பது மாதிரியும் காரணங்கள் நீளும்.

பிள்ளைகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் போன பிறகு நாங்கள் வாழ்வது இருக்கிறதே,  அது எந்தக் கொடுமையினும், ஏன் முதியோர் இல்ல வாழ்க்கையைவிட  கூடுதலான கொடுமை. அத்தகைய தண்டனையை எங்களுக்குத் தராதீர்கள்.

பிள்ளைகள் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையும் இதில் கடுமை காட்ட வேண்டும்.

எந்த சோகத்தினும் புத்திர சோகம் கொடுமையானது.

Thursday, March 24, 2016

22 வங்கிமுறை கல்வி

 ‘வங்கிமுறை கல்விஎன்று இந்தியக் கல்விமுறையை மிகச் சரியாக அழைக்கிறார் பாவ்லோ பிரைரே. இதையும் அவர் ஒன்றும் போகிற போக்கில் கூறவில்லை. ஏறத்தாழ இருபது ஆண்டுக்காலம் இந்தியக் கல்வியை ஆய்வு செய்தபிறகே அவர் இந்த முடிவிற்கு வருகிறார். பிரேசிலைச் சேர்ந்தவரான பிரைரே வழக்கறிஞருக்கு படித்தவர். ஆனால் வருமானம் கொழிக்கும் வழக்கறிஞர் தொழிலைத் துறந்துவிட்டு ஆசை ஆசையாக ஆசிரியத் தொழிலிற்கு வந்தவர். பாடத்திட்டற்திக்குள்ளும் ப்ளூப்ரிண்ட்டிற்குள்ளும் சுறுங்கிக் கொள்ளாமல் கல்வியை எதற்குத் தரவேண்டும் என்பதை தீவிரமாக சிந்தித்தவர். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையைக் கற்பித்தலே கல்வி என்று கண்டுணர்ந்தவர். தான் கண்டுணர்ந்தது சரிதானா என்று தீர ஆய்ந்து தெளிந்தவர். அதன்பிறகு தனது கல்வி குறித்த கொள்கைகளை உரக்கக் கூறியதோடு தன்னளவில் நடைமுறைபடுத்தவும் முயற்சி செய்தவர். அவரது கல்விக் கொள்கை தங்களுக்கு விரோதமானது என்பதையும் அவரை அப்படியே விட்டுவைப்பது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் உணர்ந்த அன்றைய ராணுவ அரசாங்கம் அவரை மிகவும் கொடூரமான சிறையின் நீட்டி முடங்குவதற்குகூட வசதியற்ற ஒரு சிறிய அறையில் சிறை வைத்தது. பிறகு நாடே கடத்தியது.

பொதுவாகவே இந்தியக் கல்விமுறை அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்காமல் போனதற்கு காரணம் மெக்காலேதான் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் உண்டு. அது மிகச் சரியானதும்கூட. அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்து விடக்கூடாது என்கிற நோக்கத்தோடுதான்மெக்காலே கல்விமுறைஉருவாக்கப் பட்டது. அன்றைய இந்தியா மெக்காலே அவர்களது சகோதர நாடெல்லாம் அல்ல. இந்தியா அவர்களது காலனி நாடுகளுள் ஒன்று. பச்சையாக கூறினால் இந்தியா அவர்களது அடிமை நாடு.

இன்னும் சரியாய் சொல்வதெனில் இந்திய மக்களை அடிமைத்தனம் மாறாமல் வைத்திருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி ஆலோசனை சொன்னவர் மெக்காலே. பிரிட்டிஷ் பிரதமருக்கு இதன்பொருட்டு மெக்காலே ஒரு மிகப் பிரபலமான கடிதமொன்றை எழுதினார். இந்தியர்களது நிறம், அவர்கள் பேசும் மொழி, அவர்களது கல்வி, யாவும் ஆங்கிலேயர்களின் நிறம், மொழி, உணவு மற்றும் கல்வியை விடவும் தாழ்வானவை என்பதாக ஒரு மனப்பாங்கை அவர்களுள் விதைத்துவிட வேண்டும். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு என்றென்றும் அடிமையாகக் கிடப்பார்கள் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

உடல் உழைப்பு, அறிவுழைப்பு என்பதாக உழைப்பு பொதுவாக இரண்டு வகைப்படும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்த இரண்டுவகை உழைப்பிற்கும் ஆட்கள் தேவைப்பட்டது. உடல் உழைப்பை பொறுத்தவரை இந்தியாவில் அவர்களுக்கு பிரச்சினையே இல்லை. அப்படியொரு மனித வளம் லுவியல் குவியலாய் இந்தியாவில் கொட்டிக் கிடந்தது. மூளை உழைப்பிற்கும் இந்திய உடல் உழைப்பாளிகளை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதற்குமான படித்தவர்களை அவர்கள் இங்கிலாந்திலிருந்தே இறக்குமதி செய்யவேண்டி இருந்தது. இதற்கு அவர்கள் ஏராளம் செலவு செய்ய வேண்டி இருந்தது. அல்லது அதிகம் செலவு செய்வதாய் அவர்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருந்தது.

போகவும், கசக்கிப் பிழிபவர்கள் ஆங்கிலேயர்களாகவும் கசக்கப்படுபவர்கள் இந்தியர்களாகவும் இருப்பது இயல்பாகவே ஆன்கிலேயர்கள் மீதான ஒரு எதிர்ப்பை உண்டு செய்யும். மாறாக, இந்தியனை விட்டே இந்தியனை சுரண்டுவது என்பது இந்தியர்களுக்குள்ளேயே ஒருவிதமான ஏற்றத்தாழ்வை உருவாக்கும். அவர்கள் பிளவுபட்டு கிடப்பார்கள். ஒருவருக்கொருவர் பிரச்சினைகள் வரும். அவற்றின் மீதான புகார்களை அவர்கள் தம்மிடம்தான் கொண்டு வருவார்கள். தாங்கள் அப்பத்தைப் பிரித்துக் கொடுத்த குரங்கு மாதிரி நாட்டாமை செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.

இந்தியர்களைப் பிரிப்பதற்கு ஒரு கல்விமுறை தேவைப் பட்டது. அதை மிகச்சரியாய் மெக்காலே வடிவமைத்தார். இவன் படிக்கும் படிப்பானது இவனுள் ஒருசாராரையே யாருக்காகவோ சுரண்டுவது, எவனோ ஒரு நாட்டுக்காரன் சொல்வதை அவன் சொல்லியபடி, கேள்வி கேட்காமல் செய்வது, அவனது உழைப்பையும் இவனது அறிவையும் ஒருசேர அந்நியனுக்கு தாரை வார்ப்பது என்பது மெக்காலே கல்விமுறையின் விளைவு. அது இன்றும் தொடர்கிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் இதே கல்விமுறையே தொடர்வதாக பிரைரே கண்டுணர்ந்தார். இதைத்தான் அவர்வங்கிமுறைக் கல்விஎன்கிறார். வங்கிமுறைக் கல்வி என்பதுஎடுத்துச் சொல்லும் முறைஎன்று கூறுகிறார். இது எப்போதும் ஒருவழிப் பாதையாகவே இருக்கும். ஆசிரியர் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார். மாணவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆசிரியரை அய்யம் கேட்பதைக்கூட இந்தமுறை அனுமதிப்பதில்லை. ஆசிரியர் கூறுவதை அப்படியே பத்திரமாக சேமித்து வைப்பதே அறிவு எனக் கொள்ளப் படுகிறது. இப்படியாக எடுத்துச் சொல்லப்படுவதை ஒருவகையான நோய் என்று கூறுகிறார் பிரைரே. பிரைரே அவர்களின் கூற்றின்படி நோயாளிகளையே வகுப்பறைகள் உருவாக்குகின்றன. எனில், மோசமான நோயாளி என்பவனே நம் கல்வி முறையில் ஆகச்சிறந்த கல்விமான்.

வங்கிமுறை கல்வியில் மாணவன் என்பவன் வங்கியாகிறான். வங்கியில் பணத்தை சேமித்து வைப்பது மாதிரி மாணவனுள் அறிவு என யாராலோ கருதப்படும் ஒன்று சேமித்து வைக்கப் படுகிறது. மாணவனின் மூளையானது அடுக்கு அடுக்காக ஆசிரியரால் பிரிக்கப் படுகிறது. அவற்றுள் மாணவனுக்கு எவை எல்லாம் தேவை என்று ஆளும் வர்க்கத்தால் இயக்கப்படும் கல்வித்துறை கருதுகிறதோ அவற்றை ஆசிரியர் எடுத்து அடுக்கி வைக்கிறார். மாணவனுக்கு எவையெல்லாம் தேவை என்று ஆளும் வர்க்கம் தீர்மானிக்கிறதோ அவற்றை பாடமாக்குமாறு கல்வித்துறைக்கு கட்டளையிடும். கல்வித்துறை அவற்றை பாடத்திட்டத்தில் இணைக்கும். கல்வி நிலையங்கள் அவற்றை அவனுக்கு சொல்லித் தரும். ஆளும் வர்க்கம் ஒருபோதும் மாணவனுக்குத் தேவையானதை அவனுக்குத் தர முயற்சிக்காது. மாணாவனுக்குத் தேவையானதை அவனுக்கு சொல்லிக் கொடுத்தால் தாங்கள் ஆளும் வர்க்கமாக தொடர முடியாது என்பது அதற்குத் தெரியும். எனவே தங்களது இருத்தலை தக்க வைப்பதற்கு எவற்றையெல்லாம் அவனுக்கு சொல்லித் தரக் கூடாது என்பதை அது தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும்.

வங்கிக்கென்று எந்த ஆசாபாசமும் இருப்பதில்லை. எந்த பீரோ எங்கிருப்பது என்றோ, தன்னுள் எவை எவை சேமித்து வைக்க வேண்டும் என்றோ தன்னுள் யார் எல்லாம் இயங்க வேண்டும் என்றோ அதற்கு எந்த கருத்தும் இருக்க முடியாது. தனது சுவரில் எந்த வண்ண சாயம் அடிப்பது என்பதில் வங்கி எந்தக் கருத்தையும் கொண்டிருக்க இயலாது. அதைவிட முக்கியம், தன்னுள் சேமிக்க வைக்கப்படும் தொகையுள் எதை சேமிப்புக் கணக்கில், எதை கரண்ட் அக்கவுண்டில், எதை தொடர் சேமிப்பில், எதை நிரந்தர வைப்புக் கணக்கில் வைப்பதென்று சொல்லும் உரிமை வங்கிக்கு கிடையாது. இதைவிட முக்கியம் சேர்த்து வைக்கபடும் தொகைக்கு என்ன வட்டி தருவது என்றோ, யாரெல்லாம் பணியாற்றுவது என்றோ தன்னுள் சேமிக்கப்படும் பணத்தை யாருக்கு செலவு செய்ய வேண்டும் என்றோ வங்கியிடம் யாரும் ஒருபோதும் அபிப்பிராயம் கேட்பதில்லை.

யாருடைய பணமோ கொண்டு வரப்படுகிறது. யாரோ வாங்கி எங்கெங்கோ அடுக்கி வைக்கிறார்கள். யாருக்கோ தேவைப் படுகிறபோது அதை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ யாரோ எடுத்து எதற்கோ செலவு செய்கிறார்கள். வங்கி ஏனென்று எதையும் கேள்வி கேட்கமுடியாது. காரணம், வங்கி என்பது ஒரு பருப்பொருள்.

இன்றைய கல்விமுறையில் வங்கியைப் போலவே மாணவனும் ஒரு கருப்பொருள் அவ்வளவே. அவனுக்குள் சேமிக்கப்படும் அறிவு என்பது யாருக்கோ ஆனது. அது யாருக்காக சேமிக்கப்படுகிறதோ அவர்கள் எடுத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வார்கள். தன்னுள் சேமிக்கப்படும் அறிவை ஒருபோதும் மாணவன் எடுத்து பயன்படுத்த முடியாது.

கல்வி என்பது எந்தக் காலத்திலும் எந்த தேசத்திலும் ஒரு அரசியல் செயல்பாடாகவே இருப்பதாக பிரைரே கருதுகிறார். ஆளும் நபர்கள் தங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான, தங்களை எவரும் அசைத்துவிடாதபடிக்கு, மிகுந்த கவனத்தோடான ஒரு கல்வித்திட்ட்த்தையே எப்போதும் வடிவமைக்கும்.

மாணவர்கள் அரசியலில் செயல்படக்கூடாது என்று அது சொல்லிக்கொண்டே இருக்கும்மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் தங்களால் தங்களது இருத்தலை வெகுகாலத்திற்கு தக்கவைக்க முடியாது என்பது அதற்குத் தெரியும்.

ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பேசாமல் இருப்பதே தேசபக்தி என்று சொல்லித் தரும். ஆதரித்து அணுசரித்துப் போனால் சம்பாரித்து சுகமாக இருக்கலாம் என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லித் தருவதுபோல சொல்லித் தரும். இவையாவும் கடந்து யாருக்கேனும் சொரணை வந்து எதையேனும்ஏன்என்று எதிர்த்துக் கேட்டால் அவனை தேசவிரோதி என்று சொல்லி சித்திரவதை செய்வதன்மூலம் மற்றவர்களை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யும். ’அடங்கிப் போதலேஞானம் என்று கற்றுக் கொடுக்கும்.

எல்லோருக்கும் பசிக்கிறதா? அதுபற்றி கவலைப்படாதே. நீ உனது பசி பற்றியும் உனது குடும்பத்தின் பசிபற்றியும் மட்டுமே கவலைப்படு. ஆளும் வர்க்கத்தை அண்டிப் பிழை. உன்னை சார்ந்த உனது குடும்பத்தின் வயிறுகளை இட்டு நிறப்பு. சமூகத்தின் பசிபற்றி சிந்திப்பதோ, அல்லது அதை தீர்க்க முயற்சிப்பதோ உன் வேலை அல்ல. உனது குடும்பத்தின் சுகாதாரம் பற்றி மட்டுமே கவலை கொள்.

இவ்வாறாக தன்னைப் பற்றியும் தனது குடும்பம் பற்றியும் கடந்து எதையும் சிந்தித்துவிடக் கூடாது என்று சொல்லித் தரும் இந்த முறையை கல்வி என்று ஏற்கவே மறுக்கிறார் பிரைரே. இதைபடிப்புஎன்பதாக மட்டுமே அவரால் கருத முடிகிறது.

உலகம் முழுக்க ஒரே வகையான கல்வி என்பதே அசிங்கமானதும் வன்முறையானதும் ஆகும் என்கிறார். ‘பிரச்சினைஅடிப்படையிலான கல்விமுறையே தேவையானது என்பதை அவர் அழுத்தி எடுத்துரைக்கிறார். பிரச்சினை என்பது உலகம் முழுக்க ஒன்றானது அல்ல என்பதில் அவர் தெளிவாயிருக்கிறார். எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பிரச்சினைகள் பிரதானமாக இருக்கின்றனவோ அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து அவற்றிலிருந்து மக்கள் விடுதலை பெறுவதற்கான எத்தைகைய போராட்டங்களை கையிலெடுக்க வேண்டும் என்பதை பாடத்திட்டமாக்க வேண்டும்.

கேரளாவில் ஆற்றுமணலை யாரும் அள்ளுவதேயில்லை. ஆகவே அவர்களுக்கு நிலத்தடிநீர் பிரச்சினை என்பது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஆறுகளில் மணாலே இருக்கப் போவதில்லை என்கிற அளவில் வேக வேகமாய் சுரண்டிக்கொண்டு இருக்கிறோம். இப்போதே நிலத்தடி நீர்மட்டும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் நம் மண்ணில் நிலத்தடிநீர் என்பது அறவே இருக்காது.

இப்போது கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரேவகையான நீர்மேலாண்மையை பாடமாக வைப்பது எப்படி சரியாக இருக்கும்? இதுவே அபத்தமாக இருக்கிறபோது தனது நிலத்தடி நீராதாரத்தை பாதுகாப்பாக பத்திரப் படுத்திக்கொண்டே தென் தமிழ்நாட்டின் நிலத்தடிநீரை சுரண்டிக் கொழுக்கும் அமெரிக்காவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரேவகையான நீர் மேலாண்மையை சொல்லித் தருவது எப்படி சரியாகும்?

ஒடுக்கப்பட்டவனுக்கும் ஒடுக்குபவனுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது எப்படி சரியாகும்? எல்லோருக்கும் ஒரு வாக்குதான், யாரிடத்தும் ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்லித் தருவது தவறல்லவா?

அவனிடம் ஏழு கார்களும் ஏழு வீடுகளும் ஆயிரம் பவுன் தங்கமும் குவிந்திருக்க இவன் வாழ்க்கை நடத்த ப்ளாட்ஃபாரமே கதி என்ற நிலை இருக்கிறது. இருவருக்கும் ஒரே வாக்குதான். ஆகவே இருவரும் சமம்தான் என்கிற வகையில் சொல்லித் தருவது அவனை வசதிகளோடும் இவனை நடைபாதையிலுமே பத்திரமாக வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடுதானே தவிர வேறு என்ன?

அவனிடம் என்ன இருந்தால் என்ன? இருவருக்கும் இந்த சமூகம் ஒரு வாக்கைதான் கொடுத்திருக்கிறது. நீங்கள் இருவரும் சமம் என்று நம்ப வைத்து அவனை திருப்தி கொள்வதுபடிப்பு

இருவருக்கும் ஒரு வாக்குதான். ஆனால் அவன் கோடிசுவரனாகவும் நீ ஒன்றுமற்ற ஏழையாகவும் இருப்பது ஏன்? இதில் எப்படி சமப்படுவது என்று கற்றுக் கொடுப்பதுகல்வி

இந்தியாவைப் பொறுத்தமட்டில் படிப்பை கல்வி என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். படிப்பு இருக்கும் சமூக படிநிலையை சிதைந்துவிடாமல் பாதுகாக்கும். கல்வி சமூகத்தை சமப்படுத்தும்.

சமூக விடுதலையோ, அரசியல் விதலையோ பொருளாதார விடுதலையோ அது எதுவாயினும் அதற்கான கருவி படிப்பல்ல கல்வி.

யோசித்துப் பாருங்களேன், பிரைரே இன்று சொல்வதைத்தான் அன்றே அவ்வை கற்கை நன்றேஎன்றாள். வள்ளுவனோகற்க கசடறஎன்றான். ‘இளமையில் கல்’  என்றார்கள். எல்லோருமேகற்கசொல்லி இருக்கிறார்களேயன்றி யாரும்படிக்கசொல்லவில்லை.  


     

அலங்காரம்தானா...?






யாரோ மணி கேட்க பழக்க தோசத்தில் அலைபேசியை எடுத்தேன். சார்ஜ் இல்லாததால் பார்க்க முடியவில்லை.

கைக் கடிகாரத்தைப் பார்த்தேன்.

3 என்றது.

நிச்சயமாய் இருக்காது. இன்னும் பள்ளியே துவங்க வில்லை. கை கடிகாரத்தைக் கூர்ந்து பார்த்தேன். மார்ச் 08  என்று தேதியைக் காட்டியது.

ஆஹா,

அப்படி எனில் மார்ச் 08 இலிருந்து நின்றிருக்கிறது.

ஆனாலும் தினமும் கட்டிக் கொண்டுதானிருந்திருக்கிறேன். 

Wednesday, March 23, 2016

தொடர்வார்கள் என் தோழர்கள்



இளைஞர் முழக்கத்திற்காக தம்பி ரமேஷ் பாபு எழுதி வாங்கி 18 வருடங்கள் இருக்கும். இப்பவும் எனக்கு இதைப் பிடிக்கும்.
............................................................................................................
கண்கள் கலங்க
கைகள் நடுங்க ... 
என்ன இது?
என் இறுதி நொடிகளின்
சாட்சி நீ
என் இறுதிப் பயணத்தின்
சக பயணி நீ
கலங்காதே
காயம் பட்டு விடும்
என் மரணத்தின் கம்பீரம்
எங்கே
ஒரு புன்னகையோடு
கதவு திற காவல் நண்பனே
மரணம் வாங்க
ஒரு மகத்தான பேரணி
என்ன பேரணி...
முழக்கமேயில்லாமல் ?
எங்கே
என்னோடு சேர்ந்து
நீயும் முழங்கு
"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "
நாளை போய் உலகு சொல்
காற்று வாங்க
கடற்கரை போகும்
குதூகலத்தோடும் ...
விருது வாங்கப் போகும்
வீரனின் மிடுக்கோடும்
மரணம் வாங்க
நடந்தான் பகத் என்று
உலகை நோக்கி
உரக்க சொல் நண்பா!
எந்தத் தேவதையும்
என் இறுதி வழியில்
பூ மாறிப் பொழியவில்லை
ஒளி வட்டம் முளைக்க
வானம் கிழித்து வந்த
வாகனமேறி
நான்
வைகுந்தம் போகவில்லை
போகிற பாதை எங்கும்
தன் சொந்தப் புன்னகையை
தூவிப் போனான்
இவனென்று சொல் நண்பா
மக்கள் போராளிகளின்
உதிரத்திலும்
வியர்வையிலும்
கசிவேன் நான்
நீ கதவில் கை வைத்த
நொடி வரைக்கும்
லெனின் படித்தேன்
உனக்கு
லெனின் தெரியுமா?
நண்பா
எனக்கே
தாமதமாய்த் தெரியும்
கிடைக்க வேண்டிய
எங்களுக்கு
லெனின் மட்டும்
கிடைத்திருந்தால்
நாங்கள் இதயத்தில்
லெனினை ஏந்தியிருப்போம்
அடடா...
போராட்டப் பாதையே
திசை மாறிப் போயிருக்கும்
தேச விடுதலையோடு
ஜனங்களின் விடுதலையும்
சேர்த்தே வந்திருக்கும்
இந்தா
இந்த முத்தத்தை
சிந்தாமல் சிதறாமல்
சேர்த்துவிட்டு
துர்கா மகளிடம்
இறுதி வரை
மாமன் உன்னை
நினைத்திருந்தான்
என்று சொல்
கருணை மனு தந்த
சங்கடம்
என் தூக்குமேடை வரைக்கும்
கூடவே தொடர்ந்ததாய்
என் தந்தையிடம் சொல்
என்ன இது
துக்கம் காட்டும்
கருப்புத் துணி
தூர எறி
பூமி பார்த்துப் பிறந்தால்
பூமி வாங்குவானாம்
பூமி பார்த்து சாகிறேன்
என் மக்கள்
பூமி மீட்கட்டும்
அதிகாரிகளே
கொடுத்து வைத்தவர்கள்:
நீங்கள்
சிரித்துக் கொண்டே
சாகும் மனிதனை
உங்களைத் தவிர
யார் பார்க்க முடியும்
"எல்லாம் முடிந்தது "
என்று சொல்ல
நான் ஒன்றும் ஏசுவல்ல
தொடங்கச் சாகிறேன்
தொடர்வார்கள் என் தோழர்கள்
விடுதலை பூமியில்
உச்சி சூரியனின்
வெயிலாய் கசிவேன் நான்
"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "

கவனியுங்கள் ஜேம்ஸ்.


( முந்தைய சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்தபோது எழுதியது)
அன்பின் தோழர் ஜேம்ஸ் James Vasanthan
வணக்கம். உங்களது 35 ஆண்டுகால வளர்ச்சியைத் தொடர்ந்து மகிழ்ந்து கவனித்து வருபவன்.
உள்ளே போவதற்குள் சன்னமாக ஒரு அறிமுகம்.
நீங்கள் 1979-1982 இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தீர்கள். நான் 1980-1983 இல் அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவன். அதாவது கல்லூரியில் உங்களது ஜூனியர் நான்.
கல்லூரி காலத்தில் புனித வளனார், பிஷப், ஜமால் முகமது, தேசியக் கல்லூரி, பெரியார் என எங்கு போட்டிகள் நடந்தாலும் நீங்கள் பாடுவதைக் கேட்பதற்காக வந்துவிடுவோம் சிலர். அப்படிப் பார்த்தால் உங்களது ரசிகர்களில் நான்தான் சீனியராக இருப்பேன். என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு மௌனமான வாசகன் நான்.
உங்களது ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியை கூட்டங்கள் ஏதுமின்றி வீட்டில் இருக்கும்போது தவறாமல் கேட்கிறேன். என் மகள் தொடர்ந்து கை தட்டி ரசித்துக் கொண்டாடுகிறாள். ஆரவாரங்களுக்கு மத்தியில் அமைதியான ஆற்றொழுக்கான உங்களது பேச்சு நடை எனக்குப் பிடித்தமானது.
சூப்பர் சிங்கரில் ஸ்ரீஷாவை பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பாட வா என்று நீங்கள் சொன்னபோது அவளொத்த ஒரு குழந்தையின் தந்தையாய் மகிழ்ந்தேன். ஒரு குழந்தை பாடலை முடிக்கும் ஒவ்வொரு முறையும் அழுது முடித்தபோது முதல்முறை கொண்டாடிய நீங்கள் அதை தவறென்று மென்மையாக சுட்டியபோதும் மகிழ்ந்தேன்.
சினிமாவை மிகச் சரியாக அணுகுகிறீர்கள். முற்றாய் அதில் கறைந்து போகாமல் அதே நேரம் உங்களைப் பிரித்துவிட்டு சின்மாவை பேசிவிட முடியாது என்கிற ஒரு எதார்த்தநிலை நோக்கி நகர்கிறீர்கள்.
உங்களிடம் சில எதிர்பார்க்கிறேன் ஜேம்ஸ். எதிர்பார்த்தல் என்பதைவிட கையேந்தல் என்பதே சரியானதாகும்.
சூப்பர் சிங்கர் முடிந்ததும் இப்படி எங்கள் பத்திரிக்கையில் எழுதினேன்.
”அந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்த திரு ஆனந்த் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும். தனக்குத் தெரிந்த வித்தையை மிகுந்த அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்கு கொண்டு செல்வதில் நூறு விழுக்காட்டுக்கும் மேல் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் அவரிடம் மடங்கி முறையிட ஒன்றுண்டு.
மழலை மாறாத நான்கு வயது குழந்தைகளை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடல்களை அட்சரம் பிசகாமல், சுதி சுத்தமாய், நீளாமல் குறையாமல் சங்கதிகளை கொண்டுவர நீங்கள் கொடுத்த பயிற்சியும் பட்ட சிரமங்களும் மிக அதிகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களை தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
ஆனால் அதை குழந்தைகளின் முதிர்ச்சி (maturity) என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.
ஐம்பது வயதில் ஜானகி அம்மாவை ஐந்து வயது குழந்தையின் குரலில் பாடச் சொல்கிறீர்கள். ஐந்து வயது குழந்தையை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடலை அப்படியே பாடச் சொல்கிறீர்கள். மாறாக அம்மாவை அவர்களது குரலிலும் குழந்தைகளை குழந்தைகளின் குரலிலும் பாடச் சொல்லலாமே?
உங்களது இவ்வளவு உழைப்பும், அர்ப்பணிப்பும் நீங்கள் கொடுத்த பயிற்சியும் அந்தக் குழந்தைகளின் முயற்சியும் உழைப்பும் அவர்களது மழலை வழி கசிந்திருக்குமானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதோடு மிகச் சரியாகவும் இருந்திருக்குமே.
அந்தக் குழந்தைகள் பாடியது பேரழகாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மழலையில் திக்கித் திக்கிப் பேசியது அவர்கள் பாடியதைவிடவும் இனிமையாக இருந்ததே ஆனந்த் சார்.
அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் சாக்கில் அவர்களது மழலையையும் குழந்தைமையையும் கொன்றுபோட்டோம் என்றே தோன்றுகிறது
மழலை இசைக்கு உகந்தது என்று சொன்னால் அது குறையுடையது என்று உங்களுக்குத் தெரியும். மழலை இசைக்கு இணையானது. குழந்தையை நேசிப்பவர்களுக்கு மழலை இசையைவிடவும் இனிமையானது.
உங்கள் மீது எனக்கு அளப்பரிய மரியாதையும் நம்பிக்கையும் உண்டு ஆனந்த் சார். அவர்களது மழலையைக் கொண்டே இதைவிடவும் எதைவிடவும் காத்திரமான இசையை உங்களால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்.
மிகுந்த நம்பிக்கையோடு உங்களிடம் கை ஏந்துகிறேன் சார்.”
1. ஜேம்ஸ் , குழந்தமை மாறாமல் அவர்கள் மழலையை பயன்படுத்தி இசை செய்து தாருங்கள்.
2. சென்னை புறநகர் ரயில்களில் பாடும் பார்வையற்ற தோழர்களை ஒரு படத்திலேனும் பாட வாய்ப்பு கொடுங்கள். எங்கோ ஏகாந்தமாய் போய்விடுவது அல்லது சாவது என்று முடிவெடுத்து பயணித்துக் கொண்டிருந்த என்னை,
“ நிழல் வேண்டும்போது
மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது
துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலமொன்று எல்லோர்க்கும் உண்டு” என்று பார்வையற்ற ஒருவர் பாடியதுதான் இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறது.
கையேந்துகிறேன். கவனியுங்கள் ஜேம்ஸ்.
எதற்கும் எனது எண் 9842459759

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...