Tuesday, February 11, 2014

கவிதை


எங்கள் பூமியெங்குமவர்கள்
அத்துமீறி நுழைந்தது

வெள்ளக் காலத்தில்
தூவப்படும்
உணவுப் பொட்டலங்களிப் போல்
குண்டுகளை வீசியது

விதவிதமாய்
எம் மக்களை
விருந்து தின்ற எமனுக்கு
செரிக்காமல் கசிந்த
ஏப்பத்தின் புளிவாடை

தேனெடுப்பது
ஆடு மாடு மேய்ப்பது
சுள்ளி பொறுக்குவது தவிர
வேறெந்த வேலையும் தெரியாத
வனத்தைத் தவிர
வேறு இடமறியாத
அப்பாவித் திரளை

ஆயுதப் பயிற்சி எடுக்கிறார்கள்
என்று அவன் சொன்ன பொய்

உலகச் சராசரிகள் உச்சுக் கொட்ட
உள்ளூர் சராசரிகள்
கைகள் தட்ட

பொழுதை போக்க
எங்கள் பெண்களை அவர்கள்
குதறிச் சுவைத்தது

களவு போன
எங்கள் வாழ்க்கையை மீட்க
ஆயுதமேந்துவதும்
மனித வெடிகுண்டாய் நாங்கள்
மாறுவதும்

எல்லாம் புரிகிறது

“தீவிரவாதிகளுக்கும்
ராணுவ வீரர்களுக்கும்
இன்று நடந்த சண்டையில்”

என்று
வாசிக்கப் படும்
செய்தியைத் தவிர

9 comments:

  1. வேதனையை சொல்லியது வரிகள்

    ReplyDelete
  2. தீவிரவாதி ஆவதற்கான காரணம் புரிகிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம் . மிக்க நன்றி தோழர்

      Delete
  3. எனக்கும் புரிகிறது...
    மரத்துப்போன
    இதயத்தை
    வலுவிழந்த
    நகங்களால்
    பிராண்டுகிறது
    கவிதை...

    ReplyDelete
  4. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  5. நாம் என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எதிரிகள் தானே தீர்மானித்தனர் !?
    எனது கவிதைகள் இதே சிந்தனையில்
    http://makizhnirai.blogspot.in/2013/05/blog-post_6.html
    http://makizhnirai.blogspot.in/2013/09/blog-post_18.html
    நேரம் கிடைத்தால் படித்து கருத்துக்கூறுங்கள் தோழர் !

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வாசிக்கிறேன் தோழர். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...