Saturday, February 15, 2014

59


நீரற்ற காவிரியில்
மிச்சத்திற்கு
மணலுமில்லை

பொந்துகளில்
எலிகளும்
மிஞ்சவில்லை

உழக்கல்ல
உசிரே மிஞ்சவில்லை
உழவனுக்கு

சட்டை கிழிந்தாலும் 
சேற்று முள் கிழித்து
பாதம் கிழிந்தாலும்
வாழ்வே நார் நாராய்
வகை தொகையாய் கிழிந்தாலும்

முறுக்கி
எதிர்கொள்ளும் விவசாயி

தகித்து
நா வறண்டு
மேனியெல்லாம் 
குறுக்கும் நெடுக்குமாய்
வெடித்துக் கிடக்கும்
வயல் பார்த்து
நஞ்சுண்டான்

பயிர் விளைந்தால்
களை வைக்கும்
களை எடுப்பான்

பூச்சி வைக்கும் 
மருந்தடிப்பான்

வாரம் பலவாச்சு
விதை நெல்லும்சோறாகி

வேலையில்லை
சோம்பிக் கிடந்தும் பழக்கம் இல்லை
சுறு சுறுப்பாய்
விஷம் குடித்தான்
விவசாயத் தொழிலாளி

பர பரத்துக் 
கூடி
கடை விரிக்க 
வால் மார்ட்டை
வால் பிடித்து வரவேற்கும் அவசரத்தில்

விவசாயி
விவசாயத் தொழிலாளிஎன்று
டசன் கணக்கில்செத்த பின்பும்

கூடிக் 
கவலைப் பட
நேரமில்லை
கோட்டைகட்கு

எது கண்டு
மகிழ்ந்திருக்க

எது சொல்லி
வாழ்த்தி வைக்க?

எல்லாம் வறண்ட
வயலின் ஒரு ஓரத்தில்

எதையும் ஜெயித்து
பச்சை இலை அசைத்து
சிரிக்கும் ஒரு ஒரு சின்னப் புல்

புல்லின் ஈரத்தில் 
நீரெடுப்போம்

செத்த விவசாயி
விவசாயத் தொழிலாளி
சிதை நெருப்பில்
கங்கெடுப்போம்

பள்ளி ஆசான்
கல்லூரிப் பேராசான்
அலுவலக
பணியாளன்
அதிகாரி

ஓட்டுநர்
நடத்துனர்

வணிகன்

எல்லோரும்
கரம் கோர்ப்போம்

மாறாதது எதுவுமில்லை

கரம் கோர்ப்போம்
மாறும் இதும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...