Saturday, February 15, 2014

67


அழுவான்...

தீபந்தொட்டு
கண்ணொற்றும் வேளை
சரியாய்

கூட்டிவர வேணும்
ஒதுங்கி
ஒண்ணுக்கிருக்க வைத்து

தூங்கித் தொலைக்கிறான்
பல நாளில்
டியூஷன் முடியுமுன்னே

ரொம்பக் கனப்பதால்
முடியவில்லை
தூக்கவும்

இழுத்துதான் போகிறேன்
ஒரு வழியாய்

பாதுகாப்பிற்காய்
என்னோடு அனுப்பப்படும்
தம்பியை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...