Saturday, February 15, 2014

65

நினைவு புதைகுழிக்குள்
பத்திரமாய் எல்லாம்

கனரா வங்கியில்
கடன் வந்த மறுநாள்
மூத்தவன் பிறந்தது

சொசைட்டி கடன்பெற்ற
மூன்றாம் நாள்
அவனுக்கு
முடியெடுத்து காது குத்தியது

அபிராமி பைனான்சில்
கையெழுத்து போட்டுவிட்டு
அப்படியே போய்
அவனை
பள்ளியில் சேர்த்தது

காரவீட்டு ராமசாமியிடம்
வீட்டை
அடகு வைத்த நாளில்
அவனை
கல்லூரியில் சேர்த்தது

ரோடுபோடுவதற்கோ
எதற்கோ
எல்லா நிபந்தனைகளுக்கும்
கட்டுபட்டு
உலக வங்கியில்
நிதியமைச்சர்
கையெழுத்து போட்ட தினத்தில்
அவன்
தேர்ச்சி பெற்றது

வயலை
அடகு வைத்து
அவனை
வெளிநாடு அனுப்பியது

நினைவுப் புதைகுழிக்குள்
எல்லாம்
பத்திரமாய்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...