Wednesday, August 19, 2015

பெரியார் தாசன்






எனக்கும் அவருக்கும் பெரிய அறிமுகம் எல்லாம் இல்லை.
ஒரே ஒரு கூட்டத்தில் அவரோடு பேசுகிற அரிய வாய்ப்பு.
இனிய நந்தவனம் சந்திர சேகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். திருச்சி கலையரங்கத்தில். நானும் பேராசிரியர்.பெரியார் தாசனும் பேச வேண்டும்.
45 நிமிடம் பேசியிருக்கிறேன். பிறகு அவர் பேசினார். கேட்கவா வேண்டும்.
முடிந்து வெளியே வந்துகொண்டிருந்த போது,
“ தோழர்”
குரல் கேட்டு திரும்பினேன்.
என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கை கொடுத்தார்.
“ பட்டைய கிழப்புற பேச்சு. புதுசா இருக்கு. ஏன் வெளியே எல்லாம் வரது இல்லையா. தொடர்பு கொள்ளுங்கள். பெரியாரையும் மார்க்ஸையும் சரியா கலக்குறீங்க.அவசியம் தொடர்பு கொள்ளுங்கள்”
மீண்டும் ஒரு முறை கை குலுக்கி விட்டு காரேறுகிறார். இது நடந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்திருக்கும்.
தொடர்பு கொள்ளவில்லை.
இனி தொடர்பு கொண்டாலும் எடுத்துப் பேச அவரில்லை.
ஒரு பேச்சைக் கேட்டதற்கே என்னை அங்கீகரித்துப் பேசினீர்கள்.
எவ்வளவு கேட்டிருப்பேன். எவ்வளவு எடுத்திருப்பேன்.
உங்கள் பேச்சுக்களில் பெரும்பாலும் என்னிடம் ஆவணங்களாய்.
நன்றிசொல்லி அனுப்பி வைக்கிறோம். போய் வாருங்கள்.
(இதே நாள் 2013 இல் எழுதியது)

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...