Saturday, August 15, 2015

ஆகஸ்ட் 15, 2015

குதித்து, குதூகலித்து, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் கொப்பளித்துக் கொண்டாட இயலவில்லைதான்.
ஆனாலும் எதையும் போல் இதுவும் ஏதோ ஒரு நாளில்லைதான்.

காங்கிரஸ், லீக், இடதுசாரி, மற்றும் கட்சி சாராது தியாகித்த எனது பாட்டன்களையும் பாட்டிகளையும் போகிற போக்கில் விட்டு விட முடியவில்லைதான்.
ஆனாலும் ஒரே மனிதன் 50 ஆண்டுகால இடைவெளியில் தந்த இரண்டு நேர்காணல்களை உள் வாங்குவது அவசியம்.
அநேகமாக 1942. பாட்னா கலக்டர் அலுவலகம். ஒரு சிறுவன் அதன் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு “ வந்தே மாதரம். வெள்ளையனே வெளியேறு” என்று குரல் கொடுக்கிறான். காவலர்கள் அவனை அமைதியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கிறார்கள்.
தொடர்கிறான்.
”சுட்டுவிடுவோம்” மிரட்டுகிறார்கள்.
“ சுட்டுக் கொள்ளுங்கள்”
இன்னும் அதிக அவேசத்தோடு இன்னும் அதிக குரலெடுத்து கர்ஜிக்கிறான். “ வந்தே மாதரம். வெள்ளையனே வெளியேறு”
சுட்டே விட்டார்கள். செத்தும் போனான்.
அவனது தந்தையை பேட்டி காண்கிறார்கள்.
“ உங்கள் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“ என் மண்ணின் விடுதலைக்காக என் மகன் தன் உயிரைத் தியாகித்திருப்பது மிகுந்த பெருமையாயிருக்கிறது. என் மண்னின் விடுதலையில் என் மகனது பங்கும் குறிப்பிட்டுக் கொண்டாடும்படி இருப்பதில் எதைவிடவும் பெருமையாய் இருக்கிறது”
1992 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு கொண்டாடப் பட்டபோது அதே தந்தையிடம் அவரது மகனது தியாகம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள். சொல்கிறார்,
“ஊழலும் சுயநலமும் நிரம்பிப் போன இந்த மண்ணைப் பார்க்கும் போது என் மகன் செய்தது தியாகம் இல்லையோ, பைத்தியக்காரத்தனமோ என்று தோன்றுகிறது.”
இந்த நேர்காணலில் இருந்து நல்ல மக்கள் இயக்கங்களோடு இணைந்து பணி செய்ய வேண்டிய கடமை இருப்பது புரிகிறது.
ஆனாலும்,எதையும்போல இதுவும் ஏதோ ஒரு நாள் இல்லை எனக்கு.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...