Thursday, August 13, 2015

ரசனை 10

எடுத்துக் கொடுப்பது என்பது அபூர்வமான கலை. எடுத்ததில் எதைக் கொடுப்பது என்பதும் எப்போது கொடுப்பது என்பதும் படைப்புக் கலையின் ஆக முக்கியமான பகுதி. அந்தக் கலை மிக லகுவாக வருகிறது தோழர் பூங்கொடிக்கு (Poongodi Poongodi). கல்வித்தளத்தில் இயங்குபவர்களுக்கும், அதை இயக்குபவர்களுக்கும் எப்போதும் தேவைப்படுகிற ஐன்ஸ்டின் சொன்ன ஒரு விசயத்தை அவர் தேவையான நேரத்தில் எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவரும் ஒரு ஆசிரியை என்பதால் மகிழ்வும் நம்பிக்கையும் பெருகுகிறது.
வாழ்த்துக்கள் பூங்கொடி.
”தண்ணீர் ராஜ்யத்துக்கு மீன்தான்
சக்கரவர்த்தி,அதற்கு மரம் ஏறுவதுதான்
கல்வி எனக் கட்டாயப் பயிற்சி கொடுத்தால்
தன் வாழ்நாள் முழுவதும் அது தன்னை
திறமையில்லாத முட்டாளாகவே கருதும்”

4 comments:

  1. தொடர் பதிவுகள். ஒவ்வொன்றும் வித்தியாசமான நிலையில். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. பொட்டில் அறைந்தாற்போல என்று சொல்வார்களே
    அது இதுதான் தோழர்
    அருமை
    பூங்கொடி போற்றுதலுக்கு உரியவர்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...