Thursday, August 20, 2015

ரசனை 11

வளி மண்டலம் பெரிதும் சேதமடைந்தது
உழைப்பவனின் குடைத்துணிபோல் ஏகத்துக்கும் கிழிந்து கிடக்கும் ஓசோன் மண்டலம்
காடுகளை இயற்கை வளங்களை இஷ்டத்திற்கும் சூறையாடியது
எதை எல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து புவியை வெப்பப் படுத்தியது
போன்ற காரணங்கள்தான் மழை பெய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் என்றுதான் எல்லோரையும் போலவே நானும் இதுவரை நினைத்திருந்தேன்.
இன்று தூக்கக் கலக்கத்தில் முகநூலை மேய்ந்துகொண்டிருந்தபோது தோழர் சா.நாதன் ரவிகுமார் எழுதியிருந்தார்,
“கவிஞர்க்குப் பயந்து
வெயிலின் முதுகில்
மறைந்து கொண்டது
மழை”
கவிதையை சரியாய் எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லை. நினைவில் உள்ளதை எழுதியுள்ளேன்.
அப்பாடா, என்ன ஒரு நச்.
ஆக மழை பெய்யாமல் போவதற்கு கவிஞர்களும் ஒரு பெரிய காரணம்.
கேட்கலாம், பிறகு அவ்வப்போது பெய்கிறதே எப்படி.? அது என்னைப் போன்றவர்கள் கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டதற்கான மழையின் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...