Friday, December 22, 2023

உங்கள் பாச்சா ஒருபோதும் இங்கு வேகாது

 


அன்பிற்குரிய திரு ராஜ்நாத்சிங் அவர்களுக்கு,
வணக்கம்
நீங்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சியின் பொருட்டு சென்னைக்கு வந்து சென்றிருக்கிறீர்கள் என்றும்
சென்றவுடன்
உங்களது X தளத்தில்
பாரதக் கலாச்சாரத்தின் கோட்டையாக தென்னிந்தியா விளங்குவதாக மகிழ்ச்சி பொங்க பதிவு செய்துள்ளதாக அறிகிறேன்
அதுகுறித்து சொல்வதற்கு கொஞ்சம் இருக்கின்றன
”பாரதக் கலாச்சாரம்” என்கிறீர்கள்
ஒரு வார்த்தை விட்டு “தென்னிந்தியா” என்கிறீர்கள்
ஒன்று புரிகிறது
எங்கள் பூமி பாரதமாக இல்லை
இதை சொல்கிறபோதே இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்
பாரதத்தோடும் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை
ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென்னிந்தியா எப்போதும் இருக்கும்
இப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவதுதான் அறம்
நீங்களே சொல்கிறீர்கள்,
தென்னிந்தியா என்பது பாரதக் கலாச்சாரத்தின் கோட்டை என்று
எங்கள் கலாச்சாரம்தான் பாரதத்தின் கலாச்சாரம் என்று தாங்கள் கூறுவது உண்மையானால்,
வித்தியாசங்களைக் கொண்டாடும் எங்கள் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்
அப்படி எல்லாம் இல்லை
அந்தப் பதிவு வெறும் நடிப்பு என்றால் சொல்ல ஒன்றுண்டு எம்மிடம்,
உங்கள் பாச்சா ஒருபோதும் இங்கு வேகாது
அன்புடன்,
இரா.எட்வின்
15.12.2023
இரவு 10.25
All reactions

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...