Tuesday, December 19, 2023

உன் பல்லை நீ துலக்குவதுபோலவே

 

நமது சட்டமன்ற அவைத் தலைவர் திரு அப்பாவு அவர்கள் குடையைப் பிடித்தபடி நிவாரணப் பணிகளைப் பார்வை இடும் படம் ஒன்று கிடைத்தது
அழகாகவும் இருந்தது
மிக இயல்பான கிராமத்து மனிதனைப் போல இருந்தது
வைத்திருந்தேன்
நான் பார்த்த ஐந்தாறு படங்களிலும் அவர் குடையை அவரே பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்திருந்தேன்
அவர் நதியில் பூ அள்ளிப் போடும்போது அவர் கைகளிலும் அவர் குடை இல்லை
மற்ற சமயங்களில் அவர் கையில் அவர் குடை
இதையும் எழுதி இருந்தேன்
சில நண்பர்களுக்கு கோவம் வந்தது
வரவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு
அவர் பற்களை அவரே துலக்குகிறார் என்றுகூட எழுதுவோமா என்றுகூட வந்தது
மகிழ்ச்சியாக இருந்தது
என்ன வருத்தம் எனில்
இந்த இடத்தில் எல்லாத் தலைவர்களையும் சொல்லவில்லை
பெருமழை நேரங்களிலும்
பேரிடர் காலங்களிலும்கூட
அரை இஞ்ச் பௌடரோடு
அடுத்தவர் கொடைபிடிக்க கைவீசி நடப்பவர்களைப் பார்த்தும்
உன் பல்லை நீ துலக்குவதுபோலவே உன் குடையையை நீதானே பிடிக்க வேண்டும் என
கோவம் கொள்வதில்லையே என்பதுதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...