Thursday, December 21, 2023

ஆக CPM குடியரசுத் தலைவரை உருவாக்கிய கட்சியும்கூட

 ஒரு இக்கட்டான சூழலில் குடியரசுத் தலைவரைக் கொண்டு வந்ததில் தோழர் PR அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு


1977

குடியரசுத் தலைவருக்கான தேர்தல்

மொராஜி தேசாய்தான் அப்போதைய பிரதமர்

பிரபலமான நடனக் கலைஞர் ருக்மணியை குடியரசுத் தலைவராக்க மொராஜி விரும்புகிறார்

அவர் திறமையானவர் என்பதற்காகவோ அல்லது அந்தப் பதவிக்குப் பொறுத்தமானவர் என்பதற்காகவோ அவர் அவரைக் கொண்டுவர விரும்பவில்லை

அந்த இரண்டையும் கொண்ட எவரையும் மொராஜி விரும்பவில்லை

இவை இரண்டும் இல்லை என்பதால்தான் ருக்மணியை அவர் குடியரசுத் தலைவராக்க விரும்புகிறார்

தான் சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய,

தான் காட்டும் இடத்தில் கையெழுத்திடக் கூடிய ஒரு நபர் அவருக்குத் தேவை

அதை ருக்மணி செய்வார் என்று மொராஜி கருதுகிறார்

ஜனசங்கமும் இடதுசாரிகளும் நீலம் சஞ்சீவி ரெட்டியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்

மொராஜி பிடி கொடுக்க மறுக்கிறார்

காங்கிரசோ ஆளும் கூட்டம் அடித்துக் கொண்டு இந்த விஷயத்தில் இரண்டு பிரிவாகட்டும்

சந்தடி சாக்கில் நாம் ஜட்டியைக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகிறது

தோழர் PR அவர்களை நிறைய தலைவர்கள் மொராஜியிடம் பேசுமாறு கூறுகிறார்கள்

“The old man is not listening to anybody, you do something" என்று வாஜ்பாயி தோழர் ராமமூர்த்தியைக் கேட்கிறார்

ஒரு தோழரை தோழர் ராமமூர்த்தி அழைத்து ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார்

அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை

தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பில் இருந்துதான் இதைத் தருகிறேன்

அந்த நூலும் என்னிடம் இல்லை

அது தோழர் ராமகிருஷ்ணனாகக்கூட இருக்கலாம்

அது இரவு 12 மணி

அந்தக் கடிதத்தை உடனே மொராஜியிடம் சேர்க்க வேண்டும் என்கிறார்

பின்னிரவாக இருப்பதால் தயங்கிய அந்தத் தோழர்

உங்கள் எழுத்து மொராஜிக்குப் புரியாது காலையில் நான் டைப் அடித்து வந்து உங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறேனே என்கிறார்

மொராஜிக்கு தன் எழுத்து புரியும் என்கிறார் தோழர் PR

அந்தக் கடிதத்தில்

மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் பலமாக இருக்கிறது

ஜனதாவிலும் ருக்மணிக்கு ஆதரவில்லை

இடதுசாரிகளும் சஞீவரெட்டியைத்தான் விரும்புகிறார்கள்

எனவே சஞ்சீவரெட்டியே வேட்பாளர் என உறுதிபட சொல்கிறார்

ஆக CPM குடியரசுத் தலைவரை உருவாக்கிய கட்சியும்கூட

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...