Friday, December 22, 2023

எனக்கு பிள்ளைக்கு கிஷோர் என்று வைத்ததில் மகிழ்ச்சிதான்

 நேற்றைய கூட்டத்தின் பாதியிலேயே வெளிவரவேண்டிய சூழல்

என்னோடு கூடவே இன்னொரு நண்பரும் எழுந்து வந்திருந்தார்
தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறோம்
கேட்கிறார்
இவ்வளவெல்லாம் பேசறீங்க பிள்ளைக்குப் பெயரை கிஷோர்னு வச்சிருக்கீங்களே
அதுதான் ஏற்கவே முடியல
எத்தனையோதரம் சொல்லியாகிவிட்டது. ஆனாலும் மீண்டும் சிரித்துக் கொண்டே சொல்கிறேன்
லாகூர் சதி வழக்கில் பகத்தோடு கைதுசெய்யப்பட்ட கிஷோரிலாலை ஏனோ எனக்கு நிறையப் பிடிக்கும் தோழர். அதனால்தான்
அவர் உங்க கட்சிக்கு வந்தவர் என்பதாலா
இல்லை தோழர்
அவர் மகிழ்ச்சியானவர்
நீதிபதி தீர்ப்பை சொல்கிறபோதுகூட அதை நகைச்சுவையோடு ஏற்றவர் என்று படித்திருக்கிறேன்
அதுமட்டும் இல்லை
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது
தங்களது உரிமைகளுக்காக சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
சிறைத்துறை எப்படியேனும் உண்ணாவிரதத்தை முறியடிக்க வேண்டும் என்று தண்ணீர்ப் பானைகளில் பாலை ஊற்றி வைக்கிறது
தோழர்கள் பானைகளை உடைக்கிறார்கள்
ட்யூப் மூலமாக நீருணவை செலுத்த முயற்சிக்கிறார்கள்
தொண்டையில் புண் வந்தால் அப்படி உணவை செலுத்த முடியாது
தொண்டையில் புண் வருவதற்காக கிஷோரிலால் சிவப்பு மிளகையும் கொதிக்கும் நீரையும் குடிக்கிறார்
போக மற்ற தியாகிகள் அளவிற்கு இவர் கொண்டாடப்படவில்லை
இதெல்லாமும் சேர்ந்துதான் தோழர்
ஆனாலும் அந்தத் தோழர் தமிழ் விரோதிகள் பட்டியலில் இருந்து என்னை விடுவிக்க விரும்பாதவராகவே திரும்பினார்
எனக்கு பிள்ளைக்கு கிஷோர் என்று வைத்ததில் மகிழ்ச்சிதான்
All

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...