இந்த ஆண்டில் நான் எதிர்பாராமல் நிகழ்ந்த மூன்று
01
”இல்லை,
வரமாட்டான்
என்று தருமி புலம்புவதைப்போல
இனி வரமாட்டன்தான் போல என்கிற நிலையில் அவனது அத்தனைக் கிலோவும் அன்பாக ஒரு இரவு வீடு வந்து என்னோடு தங்கினான் விஷ்ணுபுரம் சரவணன்
02
மே 31
நான் ஓய்வு பெறுகிறேன்
பள்ளியில் இருந்து வீடு வந்தால் ஒரு புத்தக பார்சல்
மூன்று கனமான புத்தகங்கள்
பாரதி புத்தகாலயத்தில் இருந்து
நான் ஆர்டர் போடவில்லை
தோழர் Mohammed Sirajudeen அவர்களை அழைக்கிறேன்
வணக்கம் தோழர். வாழ்த்துகள். ஓய்வு சிறக்கட்டும். அந்தப் பார்சல் எங்க அன்பு தோழர் என்கிறார்
03
பணி ஓய்வு அரட்டையில் திடீரென மருத்துவர் Bhuvaneshwari Devarajan
அழைக்க மறந்து போயிருந்தேன்
“என்னை எதிர்பார்க்கலதான” என்ற அவர்களது குரல்
சோரும்போதெல்லாம் என்ன ஆச்சுடா எந்திரி லூசண்ணா என்று என்னை உசுப்பிக் கொண்டே இருக்கிறது
அனவரது கரங்களையும் பற்றிக் கொள்கிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்