Tuesday, December 19, 2023

இரண்டுப் பேரிடர்கள் இரண்டு ஆட்சியர்கள்

 

இந்த நேரத்தில் இரண்டு பேரிடர்களையும்
இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களை அந்தந்தப் பேரிடர் காலத்து அவர்களது செயல்பாடுகளுக்காக நினைக்கவும் வணங்கவும் கடமைப் பட்டிருக்கிறோம்
ஒரு பேரிடர் சுனாமி
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் சுனாமியின்போது நாகையின் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரான திரு ராதாகிருஷ்ணன்
அப்போது சுனாமிக்கு தங்களது அனைத்துக் குழந்தைகளையும் சில தாய்மார்கள் பறிகொடுத்து இருந்தனர்
அவர்களில் சிலர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்திருந்தனர்
அவர்களை அன்போடு அரவணைத்து ஆறுதல் சொன்னதோடு அவர்களுக்கு மறு அறுவை செய்து மீண்டும் அவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கச் செய்தவர் திரு ராதாகிருஷ்ணன்
இப்போது தெந்தமிழ்நாட்டின் பேய்மழைப் பேரிடர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது மாவட்டத்தில் மகப்பேற்றிற்காக காத்திருக்கும் தாய்மார்களை அடையாளம் கண்டு
அவர்களை இப்போதே மருத்துவ மனைகளில் சேர்த்து பாதுகாத்திருக்கிறார்
இந்த இரண்டு செயல்களையும் நிர்வாக ரீதியாக குறிப்பிட வேண்டுமெனில் சிறப்பான பேரிடர் மேலாண்மை என்று குறிப்பிடலாம்
ஆனால் இவை இரண்டு செயல்களும் எந்தப் பெயருக்குள்ளும் பொருந்தாத மேன்மையானவை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...