Sunday, December 24, 2023

நாம் படித்ததற்கான பெரிய காரணங்களுள் பெரியார் முக்கியமானவர்

 

30.06.1952 அன்று ஹிந்து வெளியிட்ட செய்தி இது என்பதை அடிக்கோடு இட்டு வாசிக்க வேண்டுமாய் அன்போடு கேட்கிறேன்
“அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்ய வேண்டும்,
வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை,
குலத் தொழிலை செய்தால் போதும்,
எல்லோரும் படித்தால் எங்கிருந்து வேலை கிடைக்கும்”
என்று சென்னைக்கருகில் உள்ள திருவான்மியூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் உயர்திரு முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்
என்ற இந்த செய்தியை தோழர்கள் கா.கருமலையப்பன், ந.பிரகாசு, மற்றும் இரா. மனோகரன் ஆகியோர் தொகுத்துள்ள “குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்” என்ற நூலில் வைத்திருக்கிறார்கள்
நடந்தது என்னவெனில்
அழையா விருந்தாளியாக வந்திருந்த ராஜாஜி அவர்களிடம் தங்களது பிள்ளைகள் நான்காவது வரைக்கும் படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும்
அதற்கு பதில் அளிக்கும் முகத்தான்தான் ராஜாஜி அப்படி பேசியதாகவும் அறிய முடிகிறது
தோழர் சாரோன் இதுகுறித்து என்னோடு பேசிய ஒரு பொழுதில்
அன்றைய முதல்வர் ராஜாஜி அவர்கள் சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்படவே இல்லை என்றும்
“இந்த மாநாட்டிற்கு அழையா விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறேன் என்றுதான் அவர் தனது உரையத் தொடங்கியதாகவும் கூறினார்
இதனை ஒட்டி காஞ்சிபுரத்தில் ”சென்னை மாகாண யாதவ மாணவர் மாநாடு” நடக்கிறது
அன்றைய சென்னை மாகான விவசாய மந்திரியான திரு சென்னகவுடா இதில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்
“இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை தேடக்கூடாது
நவீன பால்பண்ணைகளைத் தொடங்குங்கள்
பால் உற்பத்தியைப் பெருக்குங்கள்
கிராமப் பிள்ளைகள் காலையில் பள்ளியிலும் மாலையில் குலத்தொழிலும் கற்கவேண்டும் என்கிறார் ராஜாஜி
அதை நான் ஆமோதிக்கிறேன்”
இப்போதில் இருந்தே தந்தை பெரியார் மக்களை எச்சரிக்கத் தொடங்கி விட்டார்
இந்த நிலையில் 20.03.1953 அன்று சட்டமன்றத்தில் அன்றைய கல்வி அமைச்சர் திரு MV கிருஷ்ணமூர்த்தி குலக் கல்வியை பாதி நேரம் கற்கிறமாதிரி கல்வித் திட்டத்தை முன்வைக்கிறார்
ஆஹா,
பூனை வெளியே வந்துவிட்டது
இந்த நேரத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களைக் கலக்காமலே ராஜாஜி இதைக் கொண்டுவந்தத்ஹாகக் குறை கூறுகின்றனர்
தான் யாரையும் கேட்கத் தேவை இல்லை என்றும். இது விஷயத்தில் எது நடந்தாலும் தாமே பொறுப்பேற்பதாகவும் கொஞ்சம் ஆணவம் பொங்கக் கூறுகிறார்
இதே சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் எங்கே ராஜாஜி சட்டச்மன்றத்தைக் கலைத்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறார்கள்
அப்படிக் கலைத்துவிட்டால் தங்களுக்கு வரும் ஊதியம் நின்றுபோகுமே என்ற கவலை அவர்களைத் தொற்ரிக் கொண்டது
நாம செய்யற வேலையை நம்ம பிள்ளைகளாவது செய்யாமல் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்
அவர்களை தங்கள் தகப்பன்மார்கள் செய்கிற தொழில் நோக்கி அனுப்பும் கல்வித் திட்டம்
அயோக்கியத்தனமானது என்கிறார் பெரியார்
சனாதனம் ஒழிய வேண்டும்
புதியக் கல்வித் திட்டம் சனாதனத்தைக் கெட்டிப்படுத்தும்
ஆகவே சனாதனம் முற்றாக ஒழிய வேண்டும் என்றால் புதியக் கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார் பெரியார்
ஆசிரியர்களைத் தூண்டுகிறார்
பிள்ளைகள் நலமாக கௌரவமாக வாழ வேண்டும்
அவர்களை அப்படி உருவாக்க வேண்டும்
என்பதற்காகத்தானே நீங்கள் சம்பளம் வாங்கிகிறீர்கள்
அவர்களை மீண்டும் குலத்தொழிலுக்கு அனுப்புகிற ஒரு கல்வித் திட்டத்தை ஏன் கண்டிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார்
ராஜாஜிக்கு எதிராக ஓமாந்தூராரை, காமராசரை, பக்தவச்சலத்தை கிளப்பிப் பார்க்கிறார்
பேரணி நடத்துகிறார்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமாட்டோம் என்ற போராட்டம் நடத்துகிறார்
ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பினால்தான் குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க முடியும் என்று குத்தூசி சொல்வதை ஏற்கிறார்
ராஜாஜி வீட்டிற்கு போக வேண்டும்
நாம் அனுப்பினால் என்ன
காமராசர் அனுப்பினால் என்ன?
என்று கேட்கிறார்
இதை ஒட்டி நடந்த சம்பவங்களே ராஜாஜியை ராஜினாமா செய்ய வைக்கிறது
ஆக,
குலக்கல்வி இருந்திருந்தால் நானும் இதை வாசிக்கிறவர்களில் பலரும் படித்திருக்க முடியாது

நாம் படித்ததற்கான பெரிய காரணங்களுள் பெரியார் முக்கியமானவர்
இன்று அவரது ஐம்பதாவது நினைவுநாள்
நன்றியோடு வணங்குகிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...