Thursday, September 22, 2016

அதை நாங்கள் தொலைத்து விட்டோம்

அமைச்சரிடம் சி. பி. ஐ கேட்டார்கள்,

“ நிலக்கரி ஒதுக்கீடு சம்பந்தமாக கீழ்க் காணும் ஆவணங்களைப் பார்க்க வேண்டும்”

அமைச்சர் சொன்னார்,

“ மன்னிக்க வேண்டும் . அவற்றை தொலைத்து விட்டோம்”

உச்ச நீதிமன்றம் கேட்டது,

“ 2G சம்பந்தமாக சில கோப்புகளைப் பார்க்க வேண்டும்”

அமைச்சர் சொன்னார்,

“ மன்னித்து விடுங்கள். நாங்கள் அவற்றைத் தொலைத்து விட்டோம்.”

தொலை பேசியில் அழைத்த பக்கத்து நாட்டு அமைச்சர் சொன்னார்,

“நண்பா, உங்கள் நாட்டை என் தாயார் சுற்றிப் பார்க்க வேண்டுமாம்”

பழக்க தோஷத்தில் அமைச்சர் உண்மையை உளறினார்,

“ மன்னிக்க வேண்டும். அதை நாங்கள் தொலைத்து விட்டோம்”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...