Saturday, August 16, 2014

தோழர் ஜோதி



தோழர் ஜோதிமணி.
நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்.
என் சொந்தக் கிராமம் இவர் நின்ற தொகுதியில் . ஆக எனது தொகுதி வேட்பாளர்.
கொஞ்சம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதுகூட தவறு. தன்னை கவனிக்க வைக்கிறார்.
ஈழம், மூன்றுபேர் தூக்கு குறித்த நிலை , பொருளாதாரம் , பொதுத்துறை விற்பனை போன்றவற்றில் இவரோடு முரட்டுத்தனமாக முரண்படுபவன்.
நிறைய முதல்வர்களோடும் கட்சியின் தலைமையோடும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருந்தபோதும் இன்னும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர். இதில் இன்னொரு விஷயம், இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் பொதுப் போக்குவரத்தைத் தாண்டி வர இயலாத பொருளாதாரம். இதை கௌரவமாகக் கருதும் பேசும் நேர்மை. உழைத்து சாப்பிடவேண்டும் என்று கருதுகிற வெகுஜன அரசியல்வாதி. 
மட்டுமல்ல
அவரது வருமானத்திற்கு வியர்வைக்கும் சரியான விகிதத்தில் பொருத்தமிருப்பதாக அவரை எதிர்த்து தேர்தல் வேலைபார்த்த என் தம்பி சொல்கிறான். ஒங்க கட்சியில இருக்கவேண்டிய பொண்ணு காங்கிரசில எப்படி இருக்குன்னு தெரியல என்கிறான்.
.அவரது எளிமையும், அப்பழுக்கின்மையும், மக்களுக்குழைத்தலையும் காசு பண்ணத் தெரியாத இளிச்சவாய்த் தனத்தையும் பார்த்து அவன் இப்படி சொல்லியிருக்கக் கூடும்.
நான் பார்த்தவரை கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முயற்சிக்கிறார்.
வன்மமான விமர்சனங்களையும் புன்னகையோடும் மென்மையாகவும் எடுத்து வைக்கிறார்
இவையும் இவரது எழுத்தும் என்னை மரியாதை கொள்ள வைத்தன
மாண்பமை தம்பிதுரை அவர்கள் மக்களவை துணை சபாநாயகராக பொறுப்பேற்றவுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார்
இந்தச் செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் திரு தம்பித்துரை அவர்களை எதிர்த்து தேர்தலில் நின்ற வேட்பாளர் இவர்.
இது இந்திய அரசியலில் அபூர்வம்
வாழ்த்துக்கள் ஜோதிமணி

பின்குறிப்பு: இவரது பிறந்த நாளன்று வாழ்த்திக் கொண்டிருந்தபோது தாளாளர் வந்துவிட்டார். பேசிட்டு வாங்க என்றபோதும் அவருடனான அழைப்பைத் துண்டித்துவிட்டு போக வேண்டிய அவசரம். பிறகு அவர் பிசியாகிவிட்டார். அவரது நேரச் சிக்கலை நான் உணர்ந்து வைத்திருப்பதைப் போலவே எனதையும் புரிந்து வைத்திருக்கிறார்.

இன்னொன்று ஜோதி,

உங்கள் கொங்கு மொழியும் குரலும் அடிக்கடி தொந்தரவு செய்ய வைக்கும்

4 comments:

  1. இப்படியும் ஒரு நல்ல அரசியல்வாதி... பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அரசியலில் இவரைப் போன்றவர்கள் அரிதே...மாற்றங்கள் தொடரட்டும் ..வாழ்த்துகள் அவருக்கு...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...