Friday, August 3, 2018

29.07.2018

“அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!”
என்கிறார் புரட்சிக் கவிஞர்.
“நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவு ஜீவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருப்பேன்”
என்று கூறியிருக்கிறார் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு பசனகவுடா பாட்டீல் .
ஏன் அறிவை விரிவு செய்ய வேண்டும் என்பதற்கும் ஏன் அறிவாளிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்கும் இருவரும் காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.
அறிவை விரிவு செய்தால் ,
”விசாலப் பார்வையில் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”
என்கிறார் புரட்சிக் கவிஞர்.
அறிவை விரிவு செய்தால் பார்வை விசாலப்படும்.
பார்வை விசாலப்பட்டால் மக்களை மக்களாக உள்வாங்க அறிவு வழிநடத்தும்
மக்களை ஆரத்தழுவி அவர்களோடு மக்களாக இரண்டறக் கலந்து மனிதச் சமுத்திரத்தின் ஒரு துளி தானென்று அவனுக்கு அறிவு உணார்த்தும்
ஆகவேதான் புரட்சிக்கவிஞர் மனிதனை அறிவைக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறார்.
அறிவு வந்தால் அவர்கள் நமது நாட்டிற்கு எதிராக கோஷமிடுகிறார்கள் என்றும் . அறிவாளிகள் பாகிஸ்தானைவிட ஆபத்தானவர்கள் என்றும் பசனகவுடா பட்டீல் கூறியிருக்கிறார்.
எனில், அறிவிலிகள் மட்டுமே தேசப்பற்றாளர்கள் என்று கூற வருகிறாரா பசனகவுடா என்ற அச்சம் நமக்கு எழுகிறது.
அறிவு விரிவுபட்டால் எல்லா மக்களையும் தன்னைப் போல் ஒருவனாக பார்க்கத் தூண்டும் என்கிறார் பாரதிதாசன்
அறிவு விரிவுபட்டால் ஜாதி அடிபடும் என்கிறார் புரட்சிக்கவிஞர்
நமக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்த இருக்கிறது
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் எச்சூரி அவர்கள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் நாளில் அவரது தேசப் பற்றினை மெச்சி புகழ்ந்த பாரதிய ஜனதாக் கட்சியினர் குறிப்பாக வெங்கையா நாயுடு போன்றவர்கள் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வரவேண்டும் என்ற கருத்தை இதய சுத்தியோடு வைத்தனர்.
ஒரு தகவலுக்காக சொல்கிறேன்,
தோழர் யெச்சூரி அவர்கள் CBSE தேர்வில் த்ந்ந்சத்தில் முதல் மாணவனாக வந்தவர்.
எல்லா அரசுகளுக்கெதிராகவும் மக்களுக்காக சமரசமே இன்றி போராடிக் கொண்டிருப்பவர்
எல்லா அரசுகளாலும் பேரதிக நெருக்கடிக்குள்ளாகியவர்.
ஆனால் அவரால் பெரிதும் எதிர்க்கப்பட்ட பாஜக வினரே அவர் மீண்உம் அவைக்கு வர வேண்டும் என்று சொல்லுமளவிற்கு இருந்தவர்
அறிவாளிகள் சாதிக்கு எதிராகப் போராடுவார்கள்,
அறிவாளிகள் சமத்துவத்திற்காகப் போராடுவார்கள்,
அறிவாளிகள் மதச்சார்பின்மைக்காக உயிரையும் கொடுப்பார்கள்,
இவை அவர்களுக்கு ஆபத்தானவை
அவர்களுக்கு மதார்பின்மையை தங்களாது செருப்பைவிடக் கேவலமாக்க் கொள்கிற எதிர்மறை அறிவாளிகளும் இவர்கள் தரும் மண்ணை பிரியத்தோடு பெற்று தலையிலே போட்டுக் கொள்பவர்களுமே போதுமானவர்கள்
திரு பசனகவுடா, நாங்கள் பாரதிதாசனின் பிள்ளைகள்.
#சாமங்கவிந்து 21 நிமிடம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...