Friday, August 10, 2018

09.08.2018

“அடுத்த தேர்தலிலும் பாஜக வென்றால் இந்தியா “இந்து பாகிஸ்தான் ஆகலாம்” என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு சசிதரூர் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் பாஜக நண்பர்கள் ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் குதிக்கத் தொடங்கினார்கள்.
இந்த அளாப்பறைகளினூடே குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் யெச்சூரி அவர்கள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம்
ஒன்பதாம் நாளன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற ”வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விவாத்த்தில் கலந்து கொண்டு தான் உரையாற்றும் போது இதே கருத்தை வெளியிட்டதாகக் கூறியுள்ளதாக 15.07. 2018 தீக்கதிர் கூறுகிறது. இதில் யாருக்கேனும் அய்யம் இருக்குமானால் அவரது அந்த உரையானது மாநிலங்களவையின் அவைக் குறிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் யாருக்கேனும் அய்யம் இருக்குமானால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு இதை சரி பார்த்துக் கொள்ளலாம். இது விஷயத்தில் குய்யோ முறையோ என்று சத்தம் போடுபவர்களில் 99 விழுக்காடு RSS மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியினர்தான். அவர்களுக்கு இதை சரி பார்ப்பதில் ஏதும் சிரமம் இருக்கப் போவதில்லை.
இரண்டு விஷயங்கள்,
1) இவர்கள் அலறும் அளவிற்கு ஆபத்தான கூற்றா?
2) தோழ்ர் யெச்சூரி போன வருடமே இந்தக் கருத்தைக் கூறியிருக்கும்போது திரு சசிதரூர் அவர்களை அவர்கள் குறிவைத்து குதற முற்படுவது ஏன்?
உண்மையை சொல்லப்போனால் நமது மண்ணின்மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான பிடிப்பிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் அவை.அவர்களை அலற வைத்த வார்த்தை இந்து பாகிஸ்தான்’ என்பது. பாகிஸ்தான் என்று வந்து விட்டதாம். அது தேசத்திற்கு விரோதமான வார்த்தையாம். பாகிஸ்தானோடு எப்படி ஒப்பிடப் போச்சு என்று குதித்து ஓய்ந்திருக்கிறார்கள்.
அடப் பாவிகளா, இந்துபாகிஸ்தானாக இந்தியா மாறிவிடக்கூடாது என்பதைத்தானே அவர்களும் கூறுகிறார்கள். நீங்கள் மீண்டும் வந்தால் இந்தியா ‘இந்துபாகிஸ்தான்’ ஆகிவிடுமே என்ற அவர்களது கவலை அவர்களது அப்பழுக்கில்லாத தேசபக்தியில் இருந்தும் ஈரங்கசியும் மனிதாபிமானத்தில் இருந்து வந்தது.
தோழர் யெச்சூரியும் தரூரும் இந்தியா இந்தியாவாக இருக்கவேண்டும், ஒருபோதும் இந்து பாகிஸ்தானாக மாறிவிடக் கூடாது என்று கூறுகிறார்கள்
அதை நீங்கள் தவறு என்று சொன்னால் இந்தியா இந்துபாகிஸ்தானாக நீங்கள் ஆசைப் படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
இவர்கள் யெச்சூரியை விட்டுவிட்டு தரூரைப் பிடித்துக் கொண்டு சாமியாடுவதற்கு காரணம்
தோழருடையது மாநிலங்களவையின் அவைக் குறிப்பில் உள்ளது
தரூரினுடையது சமூக வலைத்தளத்தில் இருக்கிறது
சமூக வலைதளம் வீரியம் மிக்கது
#சாமங்கவிய 16 நிமிடங்கள்
09.08.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...