Saturday, September 8, 2018

LIC நமது சொத்து. நாமென்ன செய்யலாம்?

ஆரவாரமே இல்லாமல் ஒரு பொதுத்துறை நிறுவனம் 60 ஆண்டுகள் தொடர்ந்து லாபமீட்டியபடியே இருக்கிறது. ஏறத்தாழ பதினாறு லட்சம் கோடி அளவில் சொத்துக்களை மட்டும் குவித்து வைத்திருக்கிறது.
பதினாறு லட்சம் அளவிற்கு சொத்து மட்டுமெனில் லாபம் எவ்வளவு என்பது பாமரத்தனமாய் விரியும் கேள்வி.
ஆக இத்தனைச் சொத்தும் லாபமும் பொதுத்துறைக்கு. பொதுத்துறை என்பது மக்களுடையது. எனில் இந்தச் சொத்தும் லாபமும் மக்களுடையது.
ஏற்கனவே 246 தனியார் ஆயுள் காப்பீட்டுக் கழகங்களை ஒன்றிணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப் பட்டிருக்கிறது என்பதையறியும்போது இரண்டு விஷயங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.
1) 246 பெருமுதலாளிகளின் கொள்ளை
லாபத்திலிருந்து நிறுவனங்களை
மீட்பதோ அதைப் பொதுவில்
நிறுவனப் படுத்துவதோ எவ்வளவு
சிரமமானது
பெயரைக்கூட வெளிப்படுத்தாமல்
அந்தக் கடினமான காரியம். இந்த
நேரத்தில் சமஸ்தானங்களை
ஒன்றிணைத்த மோசடிக்காக
ஆயிரக்கணக்கான டன் அளவில் ஒரு
துருப் பிடித்த மனிதனுக்கு இரும்புச்
சிலை வைக்கப்படும் அநியாயத்தையும்
சேர்த்தே பார்க்க வேண்டும் என்பது
2) 56 ஆம் ஆண்டிற்கு முன்னமே
காப்பீட்டின் அவசியத்தை மக்கள்
உணர்ந்திருந்திருக்கிறார்கள் என்பது
இவ்வளவு சொத்தையும் லாபத்தையும் மக்களுக்கு மடை மாற்றிய ஸ்தாபனம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
லாபமும் சொத்தும் மக்களுக்கு மட்டுமல்ல, லட்சக் கணக்கானோருக்கு நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பும் முகவர்கள் என்கிற வகையில் பல லட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குகிற இந்த நிறுவனத்தை, விபத்துக்களால், மரணத்தால் குடும்பங்கள் நொறுங்கிப் போகாமல் மீண்டும் இயல்பாய் இயங்க கரம் நீட்டும் இந்த நிறுவனத்தை மீண்டும் சில பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க காங்கிரசும் பிஜேபியும் படாத பாடு படுகிறார்கள்.
ஒருபக்கம் நிறுவனத்தைக் காப்பதற்காகப் போராடிக் கொண்டே நிறுவனம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவதை ஒட்டி வார விழாவை அதன் ஊழியர்கள் கொண்டாடுகிறார்கள்
LIC நமது சொத்து.
நாமென்ன செய்யலாம்?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...