Thursday, September 6, 2018

05.09.2018

இன்று காலை கூட்டு பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் குழந்தை திருக்குறளைக் கூற வரும்வரை எல்லாமே வழமையாகத்தான் சென்றுகொண்டிருந்தன.
“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற குறளை அவள் கூறத் தொடங்கியதும் நிமிர்கிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு குழந்தை இதே குறளைக் கூறினாள். நான் பேசும்போது தோன்றும்போது புகழோடு யாரும் புகழோடு தோன்றிவிட முடியாது. ஒருவனது புகழுக்கும் உழைப்புக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
இன்று மீண்டும் அதே குறளை ஒரு குழந்தை எடுத்து வந்திருக்கிறாள். ஏன் இப்படி செய்கிறாள்? கவனிக்கத் தோன்றியது
கவனிக்கிறேன்.
குறளை தெளிவாகக் கூறினாள்
குறளை முடித்ததும் அவள் பொருள் சொல்ல ஆரம்பித்ததும் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டேன்
“இப்ப ஒருத்தர் ஒரு வேலைக்கு போகறதுன்னு முடிவெடுத்துட்டார்னு வச்சுக்கங்க. அவர் அந்த வேலைக்கு வரும் முன்னரே அந்த்த் தொழிலை முழுவதுமாக கற்றுத் தேற வேண்டும்.
அப்படி அந்த்த் தொழிலைக் கற்ரு அந்த வேலையில் எக்ஸ்பர்ட்டா ஆயிட்டார்னா தேர்ந்து எடுத்த அந்தத் தொழிலுக்குள் தோன்றும் பொழுதே அதாவது நுழையும் பொழுதே புகழ் கிடைக்கும்.
அது மட்டும் அல்ல ஒரு தொழிலில் நுழையும்போதே புகழடைய வேண்டுமானால் அந்தத் தொழில்மீது அவனுக்கு ஒரு வெறியே இருக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்கிறார்” என்றாள்.
அது சரியா தப்பா என்பதெல்லாம் அப்புறம். முதலில் இந்த முயற்சியைக் கொண்டாட வேண்டாமா?
அனுபவத்தில் சொல்கிறேன்,
குழந்தைகளை சுயமாக சிந்திக்க அனுமதித்தால் கங்குகள் கிடைக்கும்
#சாமங்கவிய முப்பத்தி ஐந்து நிமிடங்கள்
05.09.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...