Thursday, February 12, 2015

நிலைத் தகவல் 66

நேற்று காலை பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்திற்காக ஓட்டுநர் திடீரென்று ப்ரேக் போடவே பெரும் பகுதி பயணிகள் ஏதோ ஒன்றில் மோதிக் கொண்டோம். எனது கண்ணாடி விழுந்துவிட்டது. நான் இருக்கைகளுக்கு அருகே நடப் பட்டிருக்கும் கம்பம் ஒன்றில் பலமாக மோதிக் கொண்டேன். இடது கண் அடிபட்டுவிட்டது.

பலபேருக்கு கை வலி, சிலர் முன்னிருக்கை கம்பியில் மோதிக் கொண்டதில் நெற்றியில் அடி. வேறு ஒன்றும் பெரிதாயில்லை. அவரவர் இறங்கி அவரவர் வேலைக்கு சென்றுவிட்டோம்.

வலி இருக்கவே மாலை பெரம்பலூர் வாசன் ஐ கேர் போனேன். பரிசோதித்த மருத்துவர் ஒன்றும் இல்லை சார் பயப்படாதீங்க என்று சொல்லிக் கொண்டே சரி செய்தார்.

அப்போது அவர் கேட்டதை சொல்லவே இந்தப் பகிர்வு.

ரெண்டு கண்ணுலயும் அறுவை செய்திருக்கீங்க போல சார். யார் செய்தது?

நான் டாக்டர் ரமேஷ் என்றேன். வலது கண்? என்றார். அதற்கும் டாக்டர் ரமேஷ்தான் சார் என்றேன்.

மிக மிக நேர்த்தியான அறுவை, wonderful piece of surgery என்றார்.

என்ன சொல்வது,

அடுத்த மருத்துவர் செய்த நேர்த்தியான அறுவையை பாராட்டும் இன்னொரு மருத்துவரின் கஞ்சத்தனமற்ற பெருந்தன்மையையா?

அல்லது,

17 ஆண்டுகளுக்குப் பிறகும் தான் செய்த அறுவை சிகிச்சை மற்றொரு தரமான மருத்துவர் பாராட்டும்படி செய்த எனக்கு பார்வையை மீண்டும் பெற்றுத் தந்த மருத்துவர் ரமேஷ் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையையா?

ரெண்டும்தான்.

4 comments:

  1. Ethukku driver brake pottarnu sollavae illai.

    ReplyDelete
    Replies
    1. யாருக்குத் தெரியும்?

      Delete
  2. என்னால் நம்பவே முடியவில்லை தோழர்
    இப்படி ஒரு மருத்துவரா
    எனது அனுபவ்ங்கள் வேறு மாதிரியானது
    நன்றி தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. இருக்கவே இருக்காங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...