Tuesday, February 24, 2015

குறும் படம் .

கரம்பக்குடி த .மு.க.ச மாநாட்டில் ஒரு குறும் படம் பற்றி கேள்விபட்டேன்.

படம் தொடங்கியதும் ஒரு பெண் காரைத்தட்டில் இந்தப்புறமிருக்கும் மண்ணை அந்தப்பக்கம் கொட்டுகிறார். மீண்டும் இந்தப் பக்கம் வருகிறார். மீண்டும் மண் அள்ளுகிறார். மீண்டும் அந்தப் பக்கம் சென்று கொட்டுகிறார்

5 நிமிடம் 11 நொடிகள் ஓடும் குறும்படத்தில் 5 நிமிடங்கள் தொடர்கிறது.

அலுப்பும் எரிச்சலும் நம்மை அப்பிக் கொள்ளும் புள்ளியில்  எழுத்து இப்படி ஓடுகிறது,

"ஒரே வேலையை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பார்க்கவே அலுப்பும் எரிச்சலுமாய் இருக்கிறதல்லவா...

தலைமுறை தலைமுறையாக மாற்றமே இல்லாமல் இவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்."

நெற்றியில் அறைகிறது.


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...