Friday, February 27, 2015

குறும் படம் 02

நாகை முக்கூடல் நிகழ்ச்சியில் நான் பேசுவதற்கு முன்னால் இரண்டு குறும் படங்களை வெளியிட்டார் தம்பி வெற்றிச் செல்வன்.

அது ஒரு கூரை வீடு என்று ஒத்துக் கொள்வதற்கு உரிய குறந்த பட்ச காரணங்களுள் ஒன்றிரண்டு இருப்பதால் அதை கூறைவீடு என்று ஒத்துக் கொள்ளலாம். மண் தரை. வெளியே கூரையை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மரத் தூணில் சாய்ந்து கொண்டிருக்கிறார் ஒரு பெண். வெளியே பழைய பாட்டில்களை வாங்கும் வியாபாரி ஒருவர் ஒரு பெரிய சாக்கினுள் பாட்டில்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்.ஒரு சாக்கு நிரம்புகிறது. சாக்கைக் கட்டிக் கொண்டு கொஞ்சம் பணத்தை கொடுக்கிறார்.

“ பார்த்தும்மா, பத்திரமா வச்சுக்க. உங்க வீட்டுக் காரனுக்கு தெரிஞ்சா இதையும் புடிங்கிட்டுப் போயி குடிச்சுட்டு வந்துடுவான்” என்றவாரே நகர்கிறார்.

பணத்தை வாங்கிய அந்தப் பெண் அதை எண்ணக்கூடச் செய்யாமல் அப்படியே வீட்டின் கீழ் பக்கமாக வருகிறார். அங்கு இரண்டு பேர் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் பார்த்ததும் எழுந்து நிற்கிறார்கள்.அதில் ஒருவரிடம் அந்தப் பணத்தை நீட்டியவாறே இவ்வளவுதான் தன்னால் முடியும் என்று சொல்லியவாறே கண்ணைக் கசக்கியவாறு நகர்கிறார்.

அவர்தான் அந்தப் பெண்ணின் கணவரென்றும் சாராயம் குடிக்க தொந்தரவு செய்ததால் பாட்டில்களை விற்று இன்றைய அவரது செலவிற்கு அனுப்பி வைப்பதாகவும் யூகிக்கிறோம். அவர்கள் இருவரும் நகர்கிறார்கள். இந்தப் பெண் முன்னர் நின்று கொண்டிருந்த இடத்தில் அமர்ந்து கண்ணைக் கசக்குகிறார்..

இப்போது கேமரா வீட்டின் உள்ளிருந்து இயங்குகிறது. அந்த மங்கிய வெளிச்சத்தில் கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டவைக்கப் பட்டுள்ள நிலையில் படுக்க வைக்கப் பட்டுள்ள ஒரு உருவத்தின் கால் பகுதி மட்டும் தெரிகிறது.

பொட்டில் அடித்தது மாதிரி புரிகிறது. கணவன் செத்துப் போயிருக்கிறான். தகணச் செலவுக்கு அவன் குடித்துப் போட்ட குப்பிகளை விற்று வந்த காசைத் தவிர ஏதும் இல்லை.

வேறு எதுவும் இந்தப் படம் பிரச்சாரமெல்லாம் உரத்த குரலெடுத்து செய்ய வில்லை.

குடி குடும்பத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் வலியை, வேதனையை, இழப்பை இதைவிட எப்படி பார்ப்பவரின் மனசைக் குடையக் குடையக் கொண்டுவர முடியும் என்று தெரியவில்லை.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அன்று இரவு நம்மால் தூங்க இயலாது. நாலு பேரிடம் இதைப் பற்றிப் பேசுவோம்.  நமது பிரச்சாரத்திற்கான கருவியாய் மௌனமாக மாறிப் போய்விடும் அந்தப் படம்.  இதுதான் அந்தப் படத்தின் வெற்றி.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...