Friday, February 13, 2015

நிலைத் தகவல் 67

ஸ்ரீரங்கம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாத்துரை எனது மாணவர். ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போய் சம்பாதித்து தன் பெண்டு தன் பிள்ளை என்று சுகமாக வாழ்ந்திருக்க வேண்டியவன்.
மக்களுக்கான போராட்டங்கள், போலீஸ் தடியடி, சிறை என்று அவனை மக்களுக்கான போராளியாக மடை மாற்றியதில் என் பங்கும் உண்டு. என்னைவிட 6 வயதே இளைய என் மாணவன்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஒரு சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வந்திருந்தபோது “ஒழுங்கா பாடம் நடத்தாம அதையும் இதையும் சொல்லி என்னை இப்படி அலைய விட்டுட்டியே அண்ணா” என்றான்.
ஆசிரியர் பணிக்கு வந்ததற்கான பயனை அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.
தனக்கோ குடும்பத்தில் யாருக்கோ திடீரென மருத்துவ செலவு 2000 ரூபாய் அளவு வருமெனில் கட்சியையோ அல்லது கட்சி ஊழியர்களையோ சார்ந்தே நிற்க வேண்டியவன்.
அதுவும் பெருமையாகத்தான் இருக்கிறது.
அவனால் ஆளுக்கு 2000 ரூபாய் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.
இப்படி மக்களுக்குக்காக போராடும் என் மாணவன் ஒருவனும் தேர்தல் களத்தில் நிற்கிறான்.
தேர்தலில் நிற்பவர்களில் எவன் யோக்கியன் என்று கேட்கும் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்.
சுரண்டத் தெரியாத ஒருவனும் களத்தில் இருக்கிறான் என்பது அவர்களின் தகவலுக்காக.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...