Monday, February 16, 2015

வெறியன் வெறியை மட்டுமே...

”இப்படி ஒரு மோசமான பதிவிற்கு நீங்கள் எப்படி லைக் போடலாம். ரொம்ப வருத்தமா இருக்கு தோழர்” என்பதாக முகநூலில் தோழர் Sampath Srinivasan அவர்களிடமிருந்து வந்த தனிச் செய்தி என்னை ஒருகணம் அசைத்துப்போட்டுவிட்டது. காரணம் என்மீதும் என் எழுத்து மீதும் மிகப் பெரிய அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர் அவர். நான் அதை விடவும் கூடுதலான மரியாதையையும் அன்பையும் அவர்மீது வைத்திருப்பவன்.

விஷயம் இதுதான்,

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த ஊழியர்களுக்கு சுகம் அளிப்பதற்காக இங்கிருந்து இஸ்லாமிய பெண்களை அனுப்புகிறமாதிரி செய்தியையும் கேவலமான ஒரு புகைப் படத்தையும் யாரோ சில விஷமிகள் வெளியிட்டிருந்தனர்.

அதை எதிர்க்கிறேன் என்று உடற்பயிற்சியில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் பெண் ஊழியர்களின் படத்தை கொச்சையான முறையில் போட்டு கேவலமாக சிலர் பகிர்ந்திருந்தனர். அந்தப் படத்தை போட்டு இந்தக் கேவலத்தை தான் எதிர்ப்பதாகவும் மதவெறியர்கள் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தோழர் மன்சூர். செ.ப.மு.] அவர்கள் மிக நேர்மையோடும் அக்கறையோடும் இட்டிருந்த பதிவிற்கு நான் லைக் இட்டிருந்தேன்.

மட்டுமல்ல, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தீர்வாகாது என்றும் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

அந்தப் படத்தை மட்டும் பார்த்துவிட்டு எனது லைக்கை பார்த்ததும் தோழர் சம்பத் அவர்கள் பதறி இருக்கிறார்.

இப்படி பட்ட தோழர்கள் நெறிப்படுத்த இருக்கும்போது நாம் தவறிழைக்க வாய்ப்பில்லை. நாம் கவனிக்கப் படுகிறோம் என்பதும் நம்மிடம் எதிர்பாக்கிறார்கள் என்பதும் நமது பொறுப்பினை கூட்டுகிறது.

என்னைப் பொறுத்தவரை தோழர்கள் சம்பத் மற்றும் மன்சூர் இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது எந்த மதத்தோடும் எனக்கு சம்மதம் கிடையாது என்பதில் எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதே நேரத்தில் எனக்குள்ள இந்த உரிமைபோலவே எவர் ஒருவருக்கும் ஏதோ ஒரு அல்லது பல தெய்வங்களை வழிபடவும், ஏதோ ஒரு மதத்தை சார்ந்திருக்கவும் உள்ள உரிமையில் தலையிடவோ கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமை இல்லை.

மத நம்பிக்கையில்தான் நாம் உள்ளே நுழைய முடியாதே தவிர அது வெறியாக மாறும் பட்சத்தில் நாம் கேள்வி கேட்டே ஆகவேண்டும், அது எந்த மத வெறியாயினும்

இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கோ , கிறிஸ்தவர்களுக்கோ விரோதிகள் அல்ல. அப்படியேதான் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் வெறியன் இந்துவாயினும் இஸ்லாமியன் ஆயினும் கிறிஸ்தவன் ஆயினும் அவன் வெறியன் மட்டுமே. இவர்களுக்கு மதம் என்பது கிடையாது.

கிறிஸ்தவன் சிலுவையை நேசிக்கிறான், இஸ்லாமியன் பிறையை நேசிக்கிறான், இந்து சூலத்தை நேசிக்கிறான், வெறியன் வெறியை மட்டுமே நேசிக்கிறான்.

இதை இந்துவும் இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் புரிந்துகொண்டு ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...