Saturday, February 14, 2015

என் மண் மீதான...

நான் மகிழ்ந்து பறக்கிறேன்.

இன்று ஆம் ஆத்மி பதவியேற்கிறார்கள்.

முதலில் தில்லி மக்களுக்கும் ஆம் ஆத்மிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

”நான் தில்லி வாக்காளனாயிருக்கும் பட்சத்தில் எனது வாக்கு ஆமாத்மிக்கு”

என்று ஆறாம் தேதி ஒரு பதிவிட்டிருந்தேன். சில நண்பர்கள் என்னோடு பேசினார்கள். சிலர் தங்களது கோவத்தைக்கூட வெளிப் படுத்தினார்கள். ஆம் ஆத்மி என்ன செய்துவிடும் என்ற நம்பிக்கையில் அப்படி ஒரு நிலைத் தகவல் என்றார்கள். சிலர் மகிழ்ந்தார்கள்.

இப்பவும் ஆம் ஆத்மி என்ன செய்துவிடும் என்று எனக்குத் தெரியாது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா தோற்க வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். பாரதிய ஜனதாவை மக்கள் தோற்கடிப்பதற்கு அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் ஆம் ஆத்மி.

மற்றபடி ஏன் காங்கிரசை நீ ஒன்றும் சொல்வதேயில்லை என்றுகூட இரண்டொரு நண்பர்கள் கேட்டார்கள். விடுங்க தோழர் பாவம் அவர்கள்என்பதே எனது பதிலாக இருந்தது.

பாரதிய ஜனதா தோற்க வேண்டும் என்பதற்கு நம்மிடம் ஏராளம் காரணங்களிருக்கின்றன.

அதானி மற்றும் பெரு முதலாளிகள் சார்ந்த அவர்களது பொருளாதார நிலைப்பாடுகள் இவர்கள் காங்கிரசுக்கு மாற்று அல்ல என்பதை அவர்கள் கட்சிக் காரர்களையே உணர வைத்தன. விமான எரிபொருளின் விலை களைக்கொல்லி மருந்தடிக்கும் எந்திரத்தின் எரிபொருள் விலையைவிட குறைவாகுமளவிற்கான அவர்களது செல்வந்தச் சார்பு சென்ற தேர்தலில் அவர்களுக்காக தபால் ஓட்டுகளை சேகரித்த என் சக ஆசிரியர்கள் இருவரை வருத்தப் பட வைத்திருக்கிறது. அதில் ஒருவருக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கிருக்கிறது. இந்த முறை உங்க ஆளுங்க 500 ஓட்டு வாங்கினாலும் அதில் நிச்சயம் எங்க வீட்டு ஓட்டு ரெண்டும் இருக்கும் என்கிறார்.

போக இவர்களது மத அரசியல் மிக அசிங்கமானது.

இளவரசனும் திவ்யாவும் சேர்ந்துவாழ ஆசைப்பட்டால் இளவரசன் சாகவேண்டும்தான் எனில் இருவரையும் எப்படி இந்துவாக பார்ப்பது?

இங்க பேசறீங்களே. பாகிஸ்தானப் பத்திப் பேசுவீங்களா? பங்களாதேஷைப் பற்றி பேசுவீர்களா? என்றெல்லாம் எதிர் கேள்வி வருகிறது.

என் மண் குறித்த அக்கறையும் கவலையுமே எனக்கு முதன்மையானது. அங்குள்ள மதச் சார்பற்ற சக்திகள் அதை செய்கிறார்கள் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். போக “லஜ்ஜா” எழுதியதற்காக படாத பாடுபட்ட தஸ்லிமா நிரந்தரமாக இந்தியாவில் தங்க முடியவில்லை. அங்குள்ள வெறியர்களுக்கு எதிராக எழுதிய அவரை இந்தியா ஏன் பாதுகாக்க முடியவில்லை? அதுவும் அவர் இருக்க விரும்பியது கொல்கத்தாவில் என்பதும் அதுவே சாத்தியப் படவில்லை என்பதும் துயரத்திற்குரிய செய்தியல்லவா?

போன.சட்டமன்ற தேர்தலில் பெற்ற அதே சதவிகித வாக்குகளை பிஜேபி தக்கவைத்திருக்கிறார்களே என்கிறார்கள். இருக்கட்டும். தோல்வியடைந்த ஒவ்வொரு தொகுதியிலும் பி.ஜே.பி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தாலும் மகிழவே செய்வேன்.

விகிதாச்சாரம் பார்த்தால் கம்யூனிஸ்டும் அண்ணா திமுகவும் சென்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஏறத்தாழ ஒரே சதவிகித வாக்குகளைதான் பெற்றிருந்தன. எண்ணிக்கையில் வித்தியாசப் படவில்லையா?

போனமுறை பொறுப்பில் இருந்த போது தில்லி மக்களுக்கு நிறைய செய்ய முயன்றிருக்கிறார்கள் ஆம் ஆத்மி. தெருவில் குளிரில் இருந்தவர்களுக்கு பயனற்ற பேருந்துகளை இருப்பிடமாக்கியது என்னைக் கவர்ந்த ஒன்று.

நிறைய வேலை இருக்கிறது அவர்களுக்கு. போலீசை வாங்க வேண்டும்.

போக ஸ்டண்டு மாதிரி சில விசயங்களை கெஜ்ரிவால் தவிர்க்க வேண்டும். அவரது நேரம் விலை மதிப்பு மிக்கது . அதை சிக்னல்களிலும் புறநகர் ரயில்களிலும் அவர் வீணடிக்கத் தேவை இல்லை. சிக்கனத்தை எத்தனையோ வகைகளில் காட்டலாம்.

உங்களது செயல்பாடுகள் மதவெறி சக்தியை தேசம் முழுக்கவும் வீழ்த்த உதவும் என்பதை ஆமாத்மி உணர வேண்டும்.

மீண்டும் அவர்களுக்கென் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...