Sunday, February 22, 2015

43


மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்

சந்தைக்கு
நடந்தே போவான்
நடந்தே திரும்புவான்
இரண்டு மணி செலவழித்து
நான்கு ரூபாய் சேமிப்பான்

முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை

மாத்திரை போட்டா
பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
தலைவலி

சொன்னால்
மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்

பத்துப் போட்டு
மூன்று நாளில் குணமாவான்

நேரம் செலவழித்து
காசை சேமிக்கும்
மேட்டுத் தெரு
குப்பனை

சிக்கனக்காரனென்றுதான் 
ஊரே சொல்லும்

4 comments:

  1. பணத்தின் அருமை புரிந்தவன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, மிக்க நன்றி தோழர்

      Delete
  2. சந்தைக்கு
    நடந்தே போவான்
    நடந்தே திரும்புவான்
    இரண்டு மணி செலவழித்து
    நான்கு ரூபாய் சேமிப்பான்

    அதாவது வேலை இருக்கோ இல்லையோ தன்னை பிஸியாகவே காட்டிக்கொள்பவர்கள்தான் நேரவிரயத்தை அதிகம் பேசுகிறார்கள். பேருந்தில் அவசரமாய் போய்வந்து பின் டீவி முன்னால் உக்காருவதைவிட காலார நடந்துட்டு வந்தா நாலு விஷ்யங்களை பாத்தாமாதிரியும் ஆச்சு உடலலுக்கும் நல்லதுதானே?

    முக்கால் மணி நேரம் நடப்பான்
    முத்து வீட்டில்
    பேப்பர் படித்துவிட்டு
    மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
    சேமிப்பான் பேப்பர் காசை

    பேப்பர் காசு சேமிக்கப்படுதுங்கறதைவிட ஊருக்குள் இன்னொரு குப்பை சேராமல் தடுக்கப்படுதுங்கறது நல்லதுதானே?

    மாத்திரை போட்டா
    பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
    தலைவலி
    சொன்னால்
    மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்

    உடலுக்கு வியாதிகள் நேற்று தொடங்கி இன்று வருவதில்லை அதன் வேர்கள் சில நாட்களுக்குமுன்பே பல காரணங்களால் ஏற்பட்டிருக்கும் அதை பத்து நிமிடத்தில் போக்கிக்கொள்ளவேண்டும் என்பது என்ன நியாயம்?

    இதெல்லாம் மேட்டுதெரு குப்பனுக்கு தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது நீங்கள் சொல்வதைவைத்துப் பார்த்தால் மேட்டுதெரு குப்பனுக்கு வெட்டிமுறிக்கும் வேலைஎதுவும் இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. ( கமண்ட் போடும் எனக்கும்தான் )

    ReplyDelete
    Replies
    1. தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...