Tuesday, September 8, 2015

8 சந்திப்பு

முக்கியமானவையாகவோ, ரசிக்கத் தக்கனவையாகவோ உள்ள சந்திப்புகளின் காதலன் நான்.


அப்படிப் பட்ட சந்திப்புகள் அரிதாகத்தான் கிட்டும். அப்படி ஒரு அபூர்வமான சந்திப்பினை இன்றைய (19.07.2013) தீக்கதிர் வெளியிட்டுள்ளது.

ஜக்ருதி பாண்டியா மற்றும் ஆஸ்கர் அலி இருவருக்கும் இடையே விசாகப் பட்டிணம் சிறைச்சாலையில் 90 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்புதான் அது.

2003 ஆம் ஆண்டில் ஜக்ருதியின் கணவரும் முன்னால் குஜராத் அமைச்சரும், அகமதாபாத் நகரின் பாரதிய ஜனதா கட்சியின் முன்னனித் தலைவர்களில் ஒருவருமான ஹரேண் பாண்டியா கொலை செய்யப்பட்டார்.

அவரைக் கொன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு விசாகப்பட்டினம் சிறையில் இருப்பவர்தான் ஆஸ்கர் அலி. குஜராத் உயர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இவரை விடுதலை செய்தது. ஆனாலும் சி பி ஐ உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது.

இருவரது சந்திப்பும் மிக அமைதியாக இருந்தது. ஜக்ருதி கேட்கிறார்,

“ என் பிள்ளைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்லவேண்டும். சொல் , என் கணவரைக் கொன்றது யார்?”

அலி சொல்கிறார்,

“ சத்தியமாய் எனக்குத் தெரியாது. உங்கள் கணவர் கொல்லப்பட்ட நாளிலெல்லாம் எனக்கு அகமதாபாத் அறிமுகமே இல்லை. பத்து ஆண்டுகளாக மிகுந்த சித்திரவதைக்கு ஆளானேன். எனக்கொரு கேள்வி இருக்கிறது தாயே.”

“ கேளப்பா...”

“ நான் இழந்த இந்த 10 வருட வாழ்க்கையை யார் எனக்குத் திரும்பத் தருவார்கள்? “

இந்தக் கேள்விக்கு அந்தத் தாயிடம் மட்டுமல்ல யாரிடமும் பதில் இல்லை.

வெளியே வந்த ஜக்ருதி சொல்கிறார்,

“நான் உறுதியாக நம்புகிறேன், ஆஸ்கர் அலி இந்தக் கொலையில் ஈடுபடவில்லை. சரியாகத்தான் குஜராத் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

இந்தக் கொலையில் ஈடுபட்ட சிலரை எனக்குத் தெரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நான் அந்தப் பெயர்களை வெளியிடுவேன்.

என் கணவரை ஒழித்துக் கட்ட ஒரு அரசியல் சதி நடந்துள்ளது”

மூன்று விஷயங்கள் பேசப்பட வேண்டும்,,

1 ) இதே மாதிரி ஒரு சந்திப்பு தமிழகத்தில் நடந்தபோது அதற்கு கொடுக்கப் பட்ட வெளிச்சமும் முக்கியத்துவமும் இந்தச் சந்திப்பிற்கு ஏன் கிட்டவில்லை.

2) குற்றவாளிகளைத் தெரியும் என்று ஒருவர் சொல்லும் போது அவரை அழைத்து விசாரிப்பதில் அக்கறை காட்டாது ஆஸ்கர் அலியை எப்படியேனும் குற்றவாளிக்கிவிட வேண்டும் என்று சி பி ஐ முனைப்பு காட்டுவது ஏன்?

3 ) இதே மாதிரிதான் ராஜீவ் அவர்களின் கொலைப் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும். என்னை அழைத்து விசாரியுங்கள் என்று தமிழகத்திலிருந்து வேலுச்சாமி தொடர்ந்து குரல் கொடுக்கிறார். ஏன் அவர் இன்னும் முறையாக விசாரிக்கப் படவில்லை?

எது எப்படியோ இப்படி ஒரு சந்திப்பை வெளிச்சப்படுத்திய தீக்கதிருக்கு என் நன்றிகள்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...