Friday, May 12, 2017

நமது போராட்டம்

ATM அட்டையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம் என்ற தனது முடிவை SBI திரும்பப் பெற்றுக் கொண்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள்
இது தற்காலிகமானதாகத்தான் இருக்கும்
போக வங்கியில் உள்ள நமது பணத்திற்கு அவர்கள் வட்டி தருவதற்கு பதிலாக நமது பணத்தைப் பாதுகாப்பதற்காக நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறை சமீபத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது
உடனே நாமென்ன செய்வோம்?
இந்தக் கட்டணங்கள் இல்லாத தனியார் வங்கிகளை நோக்கி நகர்வோம். அவர்களும் நம்மை தேனொழுக வரவேற்று உபசரிப்பார்கள்.
விளைவு, பையப் பைய பொதுத்துறை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை படிப்படியாக இழந்து தேக்க நிலையை அடைந்து மூடப்படும் நிலை வரும்
இந்த நிலைக்குப் பிறகு தனியார் வங்கிகள் கட்டணங்களை பன்மடங்கு ஏற்றினாலும் நமக்கு வேறு போக்கிடம் இருக்கப் போவதில்லை
ஆனால் இது உலகமயம் மற்றும் தாராளமயமாக்கலின் விளைவு. எனில், நமது போராட்டம் அவற்றிற்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...