Sunday, May 21, 2017

வல்லம் தாஜுபால்

வல்லம் தாண்டிக் கொண்டிருக்கிறேன். வழக்கம் போலவே தோழர் வல்லம் தாஜுபாலின் நினைவு வருகிறது.

ரொம்ப காலமாச்சு தலைவனை சந்திச்சு.

எனக்குப் பிடித்த என் தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். சன்னமான கவிதைத் தெறிப்புகளால் அரங்கங்களை வசப்படுத்திக் கொள்வார்.

"தேசியக் கொடியில்
 வெள்ளைக் கொஞ்சம்
விலகிக் கொண்டதால்
பச்சையும் காவியும்
 அடித்துக் கொள்கின்றன"

என்று நச்செனப் போடுவார். கொடிப் பிரச்சினை வந்தபோது பாரதி எழுதிய

"பட்டுத் துகிலெனலாமோ
 அதில்
 பாய்ந்து சுழற்றும்
 பெரும் புயற் காற்று
 மட்டு மிகுந்தடித்தாலும்
 அதை மதியாத உணர்வுகொள்
 மாணிக்கப் படலம்
 இந்திரன் வச்சிரம் ஓர்பால்
 அதில் எங்கள் துலுக்கர்
 இளம்பிறை ஓர்பால்"

என்ற கவிதையோடு பொருத்திப் பார்ப்பேன்

"காட்பரீஸ்
 கம்மர்கட்
இனிப்பிலும்
வர்க்க பேதம்" என்பார்.

நுட்பமான கவிஞர்.

யாரேனும் அவரைச் சந்தித்தால் கேட்டதாக சொல்லுங்கள் தோழர்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...