Wednesday, May 10, 2017

கேள்வி கேட்ட மகளுக்கு

வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராசா அவர்களிடம் ஒரு இளைய குழந்தை கேட்டார்
"இந்த அவையில் இருப்பவர்களில் எத்தனைபேர் தங்கள் குழந்தைகளை பொதுப் பள்ளியில், தமிழ் வழியில் படிக்க வைக்கிறார்கள்?"
இதற்கு கிடைத்த பதில் மீதான விமர்சனத்தைக்கூட வைக்கத் தேவை இல்லை.
இந்த கேள்வி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்தக் கேள்வி தமிழ்ச் சூழலில் புதுசு.
எல்லாக் கட்சியினரிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றில் குறிப்பாக மொழி குறித்து நடக்கும் நிகழ்வுகளில் இந்தக் கேள்வி இன்னும் கூர்மையாக இன்னும் சூடாகக் கேட்கப்பட வேண்டும்.
அது அனைத்து இயக்கங்களிலும் உள்ள இளைஞர்களை தம் குழந்தைகளை பொதுப்பள்ளியில் சேர்க்க வைக்கும்
அதுதான் தேவை
கேள்வி கேட்ட மகளுக்கு அப்பனின் வாழ்த்து

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...