Tuesday, January 3, 2017

பர்வதாவின் குரலில் இருந்த கம்பீரமும் உயிர்ப்பும்

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள 51 மாதர் சங்க மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர்சங்க தோழர்களில் தானும் ஒருத்தி என்பதாக காலை பர்வதா (Varthini Parvatha) சொன்னபோது வழமைபோல ஏதேனும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்து மாலை அனுப்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன்.
இப்போது கருணாவின் ( கருப்பு கருணா) பக்கத்தை பார்த்தபோதுதான் சுரீரென்றது.
உடனே பர்வதாவைத் தொடர்பு கொண்டேன். திடீரென்று மண்டபத்தின் அனைத்துக் கதவுகளையும் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த ஆண் காவலர்கள் வட்டம் கட்டி அமர்ந்திருந்ததோழர்களை ரவுண்டு கட்டிக் கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் சார்லஸ் மற்றும் தமிழை தூக்கிக் கொண்டு அவர்கள் இருவரையும் மட்டும் ரிமாண்ட் செய்வதாகவும் மற்றவர்கள் கலையலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஒன்று அனைவரையும் ரிமாண்ட் செய்யுமாறும் அல்லது அனைவரையும் விடுவிக்குமாறும் கோரவே கொடுரமானதும் மிக அசிங்கமானதுமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அந்த இரண்டு தோழர்களும் இருக்குமிடத்தை சொல்ல மறுக்கிறார்களாம்.
தாக்குதலில் தோழர் ஈஸ்வரி மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்திருப்பதாகவும், உரிய மருத்துவ சிகிச்சைக்கூட தரப்படவில்லை என்றும் சொல்கிறார் பர்வதா.
பர்வதா காலில் அடி பட்டிருக்கிறது.
பர்வதாவின் குரலில் இருந்த கம்பீரமும் உயிர்ப்பும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் என்னை ஏளனம் செய்கிறது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...