Monday, January 16, 2017

சிரித்தவர்கள் ரசித்து சிரித்திருப்பார்களா?

ரயிலுக்கு புறப்படும் போது போகிற போக்கில் பார்த்தது. ஏதோ ஒரு சேனலின் பொங்கள் சிறப்பு நிகழ்ச்சியின் முன்னோட்டம்.
அனிதா (புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி ) அமர்ந்திருக்கிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் புஷ்பவனம் கம்பினால் பானைகளை உடைக்க முயன்று கொண்டிருந்தார்.
“ மூனு பானைகளையும் உடைச்சுட்டா உங்க அறுபதாம் கல்யாணத்த ஜாம் ஜாம்னு கொண்டாடலாம்” என்று உற்சாகமும் நக்கலும் கொப்பளிக்க அனிதா சொல்ல...
“ஆமாம் என்னோட அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்ணு யாரு?”
“ஏய்...”
எங்கள் வீட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏன் , அனிதாகூட ரசித்து சிரிக்கிறார்.
ஒருக்கால், “ஆமாம், அறுபதாம் கல்யாணத்துல மாப்ள யாரு?” என்று அனிதா கேட்டிருந்தால் புஷ்பவனம் கேட்டபோது ரசித்து சிரித்தவர்கள் ரசித்து சிரித்திருப்பார்களா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...