Friday, January 27, 2017

யாரைப் பார்த்து?

யாரைப் பார்த்து திரும்பத் திரும்ப பொறுக்கி என்கிறீர்கள் திரு சாமி அவர்களே.
தைரியம் இருந்தால் காரைக்காலுக்கும் நாகைக்குமிடையே கிரஹாம் ஆன்ஹூக் நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சி முடிவை வெளியிடச் சொல்லுங்கள் உமது அரசை.
ஆராய்ச்சியை ஏன் நிறுத்தினீர்கள்
மீறியும் நடந்த ஆராய்ச்சி முடிவை ஏன் வெளியிட மறுக்கிறீர்கள்.?
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் அங்கு இருந்தது என்பதும் அது மெசபடோமியாவைவிட தொண்மையானது என்பதும் தவிர வேறென்ன அதற்கான காரணம் திரு சாமி அவர்களே
கீழடியை ஏன் அவசர அவசரமாக மூடுகிறீர்கள்.
சிந்துச்சமவெளிக்கு இணையான நாகரீகம் அங்கு இருக்கக்கூடும் என்ற பயம்தானே?
வாயை மூடுங்கள் திரு சாமி என்று கூறக்கூட கூச்சமாய் இருக்கிறது. வயதை மதிக்கிற தமிழன் நான்.
இனி என்னுடைய பிள்ளைகளோடு எனது இனத் தொண்மையை உரையாடத் தொடங்க வேண்டும் என்ற தேவையை புரிய வைத்திருக்கிறீர்கள். அதற்கென் நன்றி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...