Tuesday, June 24, 2025

நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்

 

ஒரு கிழவி நடந்துகொண்டே இருக்கிறாள்
அசதியாக இருக்கிறது
ஒரு மரம் தென்படுகிறது
நிழலுக்காக ஒதுங்குகிறாள்
ஒரு சுட்டிப் பொடியன் மரத்தின் கிளையொன்றில் அமர்ந்திருக்கிறான்
“பாட்டி” என்று கத்துகிறான்
கிழவி மேலே பார்க்கிறாள்
பசிக்குதா?
ஆமாம்பா
பழம் சாப்பிடுகிறாயா
உலுக்கித் தாயேன்
சரி பெரிசு என்ன பழம் வேண்டும்
நாவல் மரத்தில் மாம்பழமா இருக்கும். உலுக்குடா பொடியா
இல்ல பாட்டி இதுல ரெண்டுவிதமான பழங்கள் இருக்கு
கிழவியே குசும்புக்காரி. குசும்பென்றால் அப்படியொரு ஞானக் குசும்பு. தன்னையே சீண்டுகிறானே என்று ஒரு நிமிடம் குழம்பியவள்
என்ன ?
சுட்ட பழமும் இருக்கு சுடாத பழமும் இருக்கு. எது வேண்டும்
சரி சரி, சுட்ட பழமா போடு. சாப்பிடற சூடில்
உலுக்குகிறான்
பழங்கள் உதிர்கின்றன
பழமெல்லாம் மணல்
மணலை ஊதிக்கொண்டே கேட்கிறாள்
சேட்டக்காரக் கழுத, சுடவே இல்ல
பையன் சொல்கிறான்
சுடாமலா ஊதற
கிழவி வெளவெளத்துப் போகிறாள்
உங்களுக்குப் புரியும் ,
கிழவி அவ்வை, பொடியன் முருகன்
இது அமித்ஷாவிற்குப் புரிய வேண்டும்
இது புனைவாகவேகூட இருந்துவிட்டுப் போகட்டும்
எங்கள் தமிழ் சமய மரபு எங்கள் முருகனை தன் பிள்ளைகளோடு இப்படியாக உறவாடவும் விளையாடவுமாக படைத்தளித்திருக்கிறது
எங்கள் கிழவிமார்கள்
எங்கள் முருகனுக்கே புத்தி சொல்வார்கள்
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு என்பார்கள்
இந்த இடம் நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்
இது குமரி அனந்தன் அய்யா பொண்ணுக்கே புரியாதபோது அமித்ஷாவிற்கு எப்படி புரியும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலில் ஒரு இடம்
”சிறப்புடனே கந்தக்
கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட
தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை”
அமித்ஷா
எங்கள் முருகனை உங்களுக்குத் தெரியாது
நகருங்கள்
அவனுக்கான மனக்கோயிலில் அன்புக்கு பஞ்சமேயிருக்காது ஷா சார்
அதைக் கெடுக்காமல் நகருங்க சாமிகளா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...