Wednesday, June 4, 2025

யார் மூப்பு என வந்துவிட்டால்

   எப்போதும் சொல்வதுதான்

1992 என்று நினைக்கிறேன்
தமுஎச மாநில மாநாடு
சென்னை கிருஷ்ணகான சபா
வரபேற்குழுத் தலைவர் பாலு மகேந்திரா இப்படியாகத் தொடங்குகிறார்
“All mothers are great. But my mother is the greatest"
இதை இப்படியாகப் பெயர்க்கலாம்,
எல்லாத் தாய்மார்களும் வணக்கத்துக்குரியவர்கள்தான். ஆனால் எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய்
இதை மொழிக்கும் பொருத்திப் பார்க்கலாம்
எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய் என்று சொல்வதற்கு தமிழனுக்கு உள்ள உரிமை
மலையாளிக்கும் உண்டு கன்னடனுக்கும் உண்டு
இது தகுதி சார்ந்த உணர்வெழுச்சி
யார் மூப்பு என வந்துவிட்டால் கொந்தளிக்கத் தேவை இல்லை
தரவுகள் இருக்கின்றன
உட்கார்ந்து ஆய்ந்து விவாதிப்போம்
அவ்வளவுதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...