தோழர் ஜெயதேவன்,
சுகன் எனக்களித்த பெருங்கொடை
என்மீது கொஞ்சம் மிகையான மதிப்பீடு வைத்திருந்தவர்
அதை அவர் வைத்த விதம் அவருக்கு கொஞ்சம் எதிர்ப்பைக் கிளப்பியது
நானே சன்னமாக எதிர்த்தேன்
அது அப்படித்தாங்க எட்வின். ப்ரோஸ்னா எனக்கு எட்வின்தான். நான் அப்படித்தான் சொல்வேன்
அதுதான் ஜெயதேவன்
நான் பாரா பிரிக்கும் விதத்தை இதுவரை நன்கறியப்பட்ட நான்கு எழுத்தாளர்கள் கொஞ்சம் நீண்டே என்னோடு பேசி இருக்கிறார்கள்
இருவர் தாங்களும் அந்த வடிவத்தை கையெடுக்க முயற்சிப்பதாகவும் சொன்னார்கள்
இதை கொஞ்சம் எழுதுங்களேன். எனக்கும் கொஞ்சம் கௌரவம் அல்லவா என்றேன்
நான்கு ஐந்து ஆண்டுகளாக ஏதும் நடக்கவில்லை
இதை ஜெயதேவன் முகநூலில் எழுதினார்
தனது ஒரு நூலை எனக்கு காணிக்கையாக்கினார்
அப்போதெல்லாம் திண்டுக்கல்லில் வருடத்திற்கு நான்கு கூட்டங்களாவது வரும்
அப்போது அவரும் நன்றாக இருந்தார். வந்துவிடுவார்
காக்கையின்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர்
நான்கு தலைமுறைக் கவிஞர்களைக் கண்டவர்
கவிதையில் எனக்குத் தெரிய இவரளவு தொடர்ந்து அப்டேட் ஆனவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்
எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர்
கால வரிசையாக அவரது நூல்களைப் படித்தால் அவரது மொழியாளுமை நம்மை பிரமிக்க வைக்கும்
வந்து சந்திக்கிறேன் தோழர்
அன்பும் முத்தமும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்