Friday, February 9, 2024

இந்த அன்பிற்குரிய தோழர்கள் பட்டியல் என்பது என்னையும் சேர்த்துதான்

 
1929

மீரட் சிறை

மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தனித்தனிக் கொட்டடிகளில் அடைக்கப்படுகிறார்கள்

பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த சதி செய்ததாக வழக்கு

இதற்கு அப்போது பெயர் சதி

இப்போது தேசப்பற்று

தேசத்திற்கு உண்மையற்றவர்களின் ஆட்சியில் தேசப்பற்றுக்கு தேசத் துரோகம் அல்லது சதி என்றே எப்போதும் பெயர்

கொட்டடியில் இருந்து வெளியே அழைத்து வரப்படும்போது சந்தித்துக்கொள்ளும் சிறிய சிறிய வாய்ப்புகளில் தோழர்கள் உரையாடிக் கொள்கிறார்கள்

நேரம் குறைவு

சுற்றிக் காவலர்கள்

அப்படியாக ஒரு சந்திப்பில் டாக்டர் அதிகாரியும் தோழர் முசாபரும் சந்தித்துக் கொண்ட அந்தச் சின்ன இடைவெளியில்

கான்பூர் சதிவழக்கில் நீதிமன்றத்தை அரசியல் களமாக தன்னால் மாற்ற முடியாமல் போனதற்காக வருந்திய தோழர் முசாபர்

மீரட் வழக்கில் நீதிமன்றத்தை பிரச்சாரக் களமாக மாற்ரினால் என்ன எனக் கேட்க

தோழர் அதிகாரி சரி என்று சொல்ல

அதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன

நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி வாக்குமூலங்கள் கொடுப்பது

பொதுவான வாக்குமூலங்கள் கொடுப்பது

முன்கூட்டியே கற்பது என

வாய்த்த சின்னச் சின்ன சந்திப்புகளில் தோழர்கள் முடிவெடுக்கிறார்கள்

செய்து காட்டுகிறார்கள்

சிறைகளை,

நீதிமன்றங்களை,

தூக்குமேடைகளை 

அரசியல் களமாக்கி இருக்கிறார்கள்

சிறையில் இருக்கிறார்கள்

தனித் தனிக் கொட்டடி

கற்றுக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்கள்

அன்பிற்குரிய தோழர்களே,

இந்த அன்பிற்குரிய தோழர்கள் பட்டியல் என்பது என்னையும் சேர்த்துதான்

சுயபரிசீலனை செய்வோம்

பின் குறிப்பு: கையில்பாரதி புத்தகாலயம் வெளியீடான தோழர் முசாபர் எழுதிய “மீரட் சதிவழக்கு” என்ற குறு நூல்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...