Sunday, February 4, 2024

இதை விஜய் தெளிவுப் படுத்தட்டும்

 

தான் “தமிழ் நாடு” என்று சொல்லப் போவதில்லைஎன்றும்

ஏன் எனில் இது நாடு அல்ல என்றும்
தான் தமிழகம் என்று அழைப்பதைப் போலவே

மக்களும் ”தமிழகம்” என்றுதான் அழைக்க வேண்டும் என்று ஆளுனர் ரவி கூறினார்
சென்ற ஆண்டு குடியரசுதின விழா தேநீர் விருந்திற்கான அழைப்பிதழில்கூட
“தமிழக ஆளுனர்” அழைப்பதாகத்தான் அச்சடித்திருந்தார்
மக்கள் கொதித்தப் பிறகு அதை மாற்றினார்
அது விஷயத்தில் தன்னையும் மாற்றிக் கொண்டார்
ஆளுனர் பயந்து பின்வாங்கிய விஷயத்தை விஜய் கையெடுக்கிறார்
ஆளுனர் “தமிழகம்” என்றதற்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருந்தது
அது தமிழர்களுக்கு எதிரான சித்தாந்தம்
மூன்று இருக்கின்றன
அந்த சித்தாந்தத்தோடு விஜயும் உடன்படுகிறார் என்பது ஒன்று
தன்னால் முடியாததை விஜயை வைத்து ஆளுனர் முயற்சிக்கிறார்
அல்லது,
ஆளுனரால் முடியாததை விஜய் முயற்சித்துப் பார்க்கிறார் என்பது இரண்டு
ஏதோ ஒரு ப்ளோவில் இந்தப் பெயர் வந்துவிட்டது என்பது மூன்று
இதை விஜய் தெளிவுப் படுத்தட்டும்
மற்றபடி நடிகர் அரசிலுக்கு வரலாமா? என்பதெல்லாம் அபத்தம்
இயங்கட்டும்
அதை விமர்சிக்கலாம்
All reactions

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...