Thursday, February 8, 2024

தெளிவாக புரிந்து வைத்திருக்கிற அந்தப் பக்கத்து ஆட்கள்

 

1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்ரீவில்லிபுதூர் அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் அந்த கிராம சங்கித்தினரால் கட்டப்பட்ட “கஸ்தூரி ஆரம்பப் பாடசாலை”யை குன்றக்குடி அடிகளார் தலைமையில் ஓமாந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் திறந்து வைத்த செய்தியை 15.10.1953 நாளிட்ட ‘விடுதலை’ தருகிறது

அப்போது பேசிய குன்றக்குடி அடிகளார்,

சென்னை சர்க்காரின் புதியக் கல்விக் கொள்கை என்னவென்றே பலருக்கும் புரியவில்லை என்றும்

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சுத்தமாகப் புரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்

இப்போதும் அப்படித்தான் இருக்கிறது

தெளிவாக புரிந்து வைத்திருக்கிற அந்தப் பக்கத்து ஆட்கள் நமக்குப் புரிந்துவிடாத மாதிரி ஜிகினா வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்

சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் புரிந்த மாதிரி நம்மைக் குழப்பப் பார்க்கிறார்கள்

நாம் பேசியாக வேண்டும்

2024 மார்ச் “ புதிய ஆசிரியன்” இதழில் ஏதேனும் ஒன்றிரண்டைப் பேசுவோம்  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...