Monday, February 5, 2024

நம்பிக்கையோடு எழுதுவோம்

 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இரவில் நானும் பொன்மலை ராஜாவும் கவிஞர் கௌதமனை அவர் வீடு சென்று சந்திக்கிறோம்
அற்புதமான கவிஞர்
அவரது கவிதைகள் குறித்து பேசுவதற்காக இப்போது அவரை நினைக்கவில்லை
“எண்பது கோடியில் இவனும் ஒருவன்” என்ற அவரது கவிதை நூலுக்கான முன்னுரையில் அவர் வைத்திருந்த இரண்டு மூன்று வரிகளே அவரை இப்போது நினைவுபடுத்தியது
எங்காவது தான் காணும் சமூக அவலங்களை ‘லெட்டர் டு தெ எடிட்டர்’ பகுதிக்கு எழுதுவதுபோல்தான் தனது கவிதைகள் என்று சொல்லி இருப்பார்
அன்றில் இருந்து அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன்
நம்முடைய இலக்கிய அந்தஸ்து அவ்வளவுதான்
சென்ற டிசம்பர் இறுதியில் காரைக்குடியில் கும்பல் கும்பலாக குழந்தைகள் பிச்சை எடுப்பதைப் பார்த்து நொந்தவனாக முகநூல், ட்விட்டர், ப்ளாக், பேசக் கிடைப்பவர்கள் என்று கத்திக் கொண்டே இருந்தேன்
நான் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை
03.02.2024 அன்று மீண்டும் காரைக்குடி செல்கிறேன்
பிச்சை எடுக்கும் எந்தக் குழந்தையும் என் கண்ணில் படவில்லை
CITU ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான தோழர் வெங்கட்டிடம் கேட்டபோது பத்துப் பதினைந்து நாட்களாகவே தனது கண்ணில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் தட்டுப்படவில்லை என்கிறார்
அப்படி ஒரு மகிழ்ச்சி
இடையில் ஒரு செய்தி கிடைத்தது
DRO வாக இருக்கும் திருமிகு ரேவதி அவர்கள் இந்தப் பதிவைப் படித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்
அவர் நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியதாகவும் தகவல் கிட்டியது
அவர் விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் வரவுள்ளவர்
எப்படி வாழ்த்துவது
ஒன்றுதான்
எழுதுவோம்
நம்பிக்கையோடு எழுதுவோம்
படவேண்டியவர்கள் கண்களில் பட்டால் நல்லது நடக்கும்
All reactions:

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...